வட மாகாண அரசில் நெருக்கடி: முதல்வரை நீக்கக் கோரி 15 தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கடிதம்

வட மாகாண அமைச்சர்களில் இருவரை ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக உத்தரவிட்டு, ஏனைய இருவருக்கும் எதிராக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்ய தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.

விக்னேஸ்வரன்

பட மூலாதாரம், Getty Images

இந்த முடிவையடுத்து அவரை பதவி நீக்கம் கோரும் கடிதத்தை புதன் இரவு அவசர அவசரமாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் அந்தக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் உட்பட 18 பேர் கையெழுத்திட்டு கையளித்துள்ளனர்.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து 4 பேரையும் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கைக்கு தமிழரசுக்கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

இதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய முதலமைச்சராக அவைத்தலைவர் சி. வி.கே.சிவஞானம் நியமிக்கப்படலாம் என யூகங்கள் நிலவுகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்