BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
நேபாளத்தில் மீண்டும் வெள்ள ஆபத்து: பனிப்பாறை ஏரி உடைய வாய்ப்புள்ளதால் மீட்புப் பணியாளர்களுக்கு சிக்கல்
சீன நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது 'லாக் டோ' தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இது உடையக்கூடும் என்பதால் நேபாளத்தில் மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்து வரலாம் என்று அஞ்சப்படுகிறது.
குஜராத்தில் இந்த சமூகங்கள் ஆகஸ்ட் 31-ஐ இரண்டாவது சுதந்திர தினமாக கொண்டாடுவது ஏன்?
'குற்ற பரம்பரை' என பட்டியலிடப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சமூகங்களின் நிலை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டது ஏன்?
ஊழல் வழக்கில் செப்டம்பர் 4ஆம் தேதி இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். இதன் முழு பின்னணி என்ன?
டெல்லியில் இரு பெண் பத்திரிகையாளர்களை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?
டெல்லியில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் மீது முஸ்லிம் மதத்தைக் குறிப்பிட்டு போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன விவகாரம்?
சத்தியமங்கலம் 'பள்ளி சத்துணவில் மாணவியை மிரட்டி சாணி பவுடரை கலக்க வைத்த' குற்றச்சாட்டில் ஒருவர் கைது
ஈரோடு, சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் சமைக்கப்பட்ட சத்துணவில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவத்தில் காலை உணவுத் திட்ட முன்னாள் பணியாளரின் கணவரை காவல்துறை கைது செய்துள்ளது. என்ன நடந்தது?
நேபாளம்: கோல்டிலாக்ஸ் மண்டலம் என்றால் என்ன? சுரங்கப் பாதை மீட்புப் பணியில் அது ஏன் முக்கியம்?
நேபாள அரசாங்கத்திற்கு மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வரும் சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்சு,மீட்புக் குழுவினர் இதுவரை சுரங்கப்பாதையில் 60 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாகவும், இன்னும் 150 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
271 நாட்கள் உடலில் பன்றியின் சிறுநீரகத்துடன் வாழ்ந்த மனிதர் – இப்போதைய நிலை என்ன?
பன்றியிடம் இருந்து மனிதருக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், அவரது உடலில் 271 நாட்கள் செயல்பட்டுள்ளது. அவருடைய இப்போதைய நிலை என்ன?
பாம்பு கடித்தால் மருத்துவமனை செல்லும் முன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது?
இந்தியாவில் ஆண்டுதோறும் 30 அல்லது 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஒருவர் எவ்வளவு விரைவாக சிகிச்சை பெற வேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆபத்து?
'வரலாற்றிலேயே மிகப் பெரியது' - வெனிசுவேலாவுடன் டிரம்ப் அறிவித்த எண்ணெய் ஒப்பந்தத்தில் என்ன சர்ச்சை?
சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வெனிசுலா உடனான எண்ணெய் ஒப்பந்தம், அந்த நாடு தொடர்பாக அமெரிக்க அதிபர் மேற்கொண்டுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?
'4 நிமிட அவகாசம் போதாத போது': ரஷ்யாவின் புதிய தாக்குதல் உத்தியால் நிலைகுலைந்த 'கீவ்'
"நீங்கள் தூங்கத் தொடங்குவதற்குள் இன்னொரு எச்சரிக்கை வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவற்றை மீண்டும் சுடுகிறார்கள். இது முழு இரவிலும் தொடர்கிறது. மக்கள் தூங்கமாட்டார்கள். பின்னர் ஜாம்பிகளைப் போல நடமாடுவார்கள்."
ஆரோக்கியமான பற்களுக்கு நீங்கள் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது?
பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பல் துலக்குதல், பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல், வாயைக் கொப்பளித்தல் மட்டுமே போதாது. நம் உணவுமுறையும் அதற்கு மிகவும் முக்கியம். ஏன் தெரியுமா?
மகளுக்கு புத்தகம் வாங்க பணம் வேண்டி, 3 கிமீ ஓட்டத்தில் வெறுங்காலுடன் ஓடி முதலிடம் பிடித்த ஒரு தாயின் கதை
ஆகஸ்ட் 29 அன்று, அம்பாஜோகாயில் ‘அம்ருத் தௌட் மாரத்தான்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரமாபாய் ஓட்டப்பயிற்சி எதுவும் மேற்கொண்டதில்லை. அவரிடம் விளையாட்டு காலணிகளோ, டிராக்சூட்டோ இல்லை. அவரது ஒரே ஓட்டப்பந்தய உடை சேலையும், சாதாரண செருப்பும்தான்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம்
நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாத என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































