வங்கதேசத்தில் நடுவானில் விமானத்தை கடத்த முயற்சி; அவசரமாக தரையிறக்கம்

விமானம்

பட மூலாதாரம், boeing.com

படக்குறிப்பு, போயிங் 747 விமானத்தின் மாதிரிப் படம்.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

வங்கதேசத்தில் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகள் இருந்த அந்த பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியது.

BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தைச் சுற்றிவளைத்துள்ள காவல் படையினர், அதைக் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபருடன் பேசி வருகின்றனர்.

விமானத்தை கடத்த முயற்சி

விமானத்தின் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர் ஏன் அந்த விமானத்தைக் கடத்த முயன்றார் என்ற தகவல் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள படங்களில் போயிங் 747 ரக விமானம் நிறுத்தப்பட்டிருப்பதும், விமான ஓடுதளத்தின் அருகே சிலர் கூடியிருப்பதும் தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: