பில்கிஸ் பானு விவகாரம்: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக குஜராத், இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Bilkis Banu

பட மூலாதாரம், Getty Images

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது. இந்நிலையில், 11 பேரின் விடுதலையை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அபர்ணா பாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், விளக்கம் கேட்டு குஜராத், இந்திய அரசுக்கு இன்று நோட்டீஸ் அளித்துள்ளது.

Banner

என்ன நடந்தது?

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அத்துடன், அவரது குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும் அரசு அமைத்த குழுவின் முடிவின் பேரில் தண்டனைக்குறைப்பு செய்து விடுவித்தது குஜராத் அரசு.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான குழு, "குஜராத் மற்றும் இந்திய அரசுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அளிக்கிறோம். இதில் இரு அரசுகளும் பதில் அளிக்க வேண்டும். மேலதிக விசாரணைக்காக 2 வாரங்கள் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது " என்று அறிவித்தது.

Banner

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி "இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து தான் கருத்தில் கொள்வதாக" தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்தது. கர்ப்பிணியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் நிவாரணம் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கக் கூடாது என, கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது.

குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மும்பை சிறப்பு நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

குற்றவாளிகள் 15 வருடங்கள் சிறையில் கழித்த பின், அதில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

அதன்பின் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து கருத்தில் கொள்ளுமாறு குஜராத் அரசை கேட்டுக் கொண்டது. பின் குஜராத் அரசு கமிட்டி ஒன்றை உருவாக்கியது.

இந்த கமிட்டிக்கு பஞ்ச்மஹால் ஆட்சியர் சுஜல் மயாட்ரா தலைமை தாங்கினார்.

குற்றவாளிகளும் 11 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய பஞ்ச்மஹால் ஆட்சியர் சுஜல் மயத்ரா, "சில மாதங்களுக்கு முன்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அந்த முடிவு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.

பில்கிஸ் பானு வழக்கு?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது 20 வயதான பானு கர்ப்பமாக இருந்தார். பில்கிஸின் 3 வயது மகள், பில்கிஸ் பானுவின் கண்முனே கொல்லப்பட்டார்.

பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு அருகாமையில் உள்ள இடத்திற்கு சென்று உயிர்ப்பிழைத்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையை சேர்ந்த சிலர் பில்கிஸ் பானுவை அச்சுறுத்தி ஆதாரங்களை அழித்தனர்.

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், Getty Images

பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர். பில்கிஸ் பானுவிற்கு கொலை மிரட்டல்களும் வந்தன.

பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரின் உடல்கள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் எரியூட்டப்பட்டன.

இருப்பினும் பில்கிஸ் பானு தொடர்ந்து போராடினார். தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டார். இதுகுறித்த முதல் கைது கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியோடு, பில்கிஸ் பானுவின் வழக்கு மகராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

குஜராத் நீதிமன்றம் நீதியை வழங்க இயலாது என்ற பில்கிஸ் பானுவின் மனுவை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

17 ஆண்டுகால போராட்ட வாழ்க்கையில் பில்கிஸ் பானுவும் அவரின் கணவரும் தங்களது குழந்தைகளுடன் இதுவரை 10 வீடுகள் மாற வேண்டியிருந்தது.

2017ஆம் ஆண்டு பிபிசி செய்தியாளர் கீதா பாண்டேவிடம் பேசிய பில்கிஸ் பானு, "காவல்துறையும், அரசு நடைமுறைகளும் தாக்குல்தாரிகளின் பக்கமே இருந்தன. குஜராத்தில் நாங்கள் யாரிடமும் பேச முடியாது. எங்கள் விலாசத்தைக் கூட யாரிடமும் வழங்க முடியாது." என்று தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: