கொரோனா வைரஸ்: 'முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்ய மாலத்தீவிடம் உதவி கேட்கவில்லை' - இலங்கை

கொரோனா வைரஸ்: 'முஸ்லிம்கள் உடல்களை அடக்கம் செய்ய மாலத்தீவிடம் உதவி கேட்கவில்லை' - இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிக்கும் கோப்புப்படம்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைத்தீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.

கொழும்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அலுவல்பூர்வ கோரிக்கை இதுவரை மாலைத்தீவிடம் (மாலத்தீவு) முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

RAMESH PATHIRANA

பட மூலாதாரம், RAMESH PATHIRANA'S FACEBOOK

இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மாலைத்தீவிடம் இலங்கை உதவியை கோரியதாக மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் தனது ட்விட்டர் தளத்தில் ஊடாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கையில் கோவிட் தொற்று தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வது தொடர்பில் மாலைத்தீவு கவனம் செலுத்தியுள்ளமை, இந்த ட்விட்டர் தள செய்தியின் ஊடாக வெளியாகியிருந்தது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி இப்ரைஹிம் சோலி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மாலத்தீவில் இஸ்லாமியர்களின் முறைப்படி உடல்களை அடக்கம் செய்ய முடியுமா என இலங்கை ஜனாதிபதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்படும் இருதரப்பு தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அந்த நாட்டு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக மாலத்தீவு வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கொரோனா வைரஸ் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதற்கு உதவிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் அனைவரது சடலங்களும் தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தகவல் வெளியாகியிருந்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner

எனினும், இலங்கை அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எட்டவில்லை என அரசாங்கத்தின் இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண கூறுகின்றார்.

இதேவேளை, இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, தொடர்ந்தும் அந்த விடயம் குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் தினங்களில் இறுதி தீர்மானமொன்றை எட்ட முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :