ராகுல் காந்தி: "மதம், மொழியின் பெயரால் இந்தியாவை பிளவுபடுத்த முடியாது"

இந்திய குடிமக்களை மதம், மொழியின் பெயரால் பிளவுபடுத்த மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரையை துவக்கி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய மூவர்ண கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கினார். அப்போது வீர வணக்கம் செலுத்துவது போல சல்யூட் அடித்து தேசிய கொடியை ராகுல் பெற்றுக் கொண்டார்.
இந்த பயணத்தையொட்டி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலரும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.
இந்த யாத்திரையின் துவக்கமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ப. சிதம்பரம், ஸ்வாரஜ் இந்தியா நிறுவனர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ராகுல் காந்தி, ஒற்றுமை பயணத்தின் தேவை மற்றும் நோக்கத்தை விளக்கிப் பேசினார். இதைத்தொடர்ந்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை குற்றம்சாட்டி அவர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். அதன் விவரம்:
"இந்திய தேசிய கொடி ,ஒரு நபருக்கான கொடி அல்ல. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சொந்தமான கொடி தேசிய மூவர்ண கொடி. இது தனிப்பட்ட மாநிலத்துக்கு மட்டும் சொந்தம் ஆனது அல்ல. இந்தியா என்ற தேசம் முழுமைக்கும் சொந்தமானது. இந்த கொடி, ஒரு மதத்துக்கோ ஒரு சமுதாயத்துக்கோ, மாநிலத்துக்கோ, ஒரு மொழிக்கோ, ஒரு ஜாதிக்கோ சொந்தமானது அல்ல. இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு துகளுக்கும் சொந்தமானது இந்திய மூவர்ண கொடி. இது வெறும் நாடு மற்றும் மாநிலத்தின் அடையாளம் மட்டுமல்ல. இது ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு இந்திய மகனும் பாதுகாக்கப்படுகிறான், சுதந்திரமான, வெளிப்படையான வாழ்க்கையை அவன் வாழ்வதை அது உறுதிப்படுத்துகிறது. எந்தவொரு மதத்தை பின்பற்றவும் மொழியை பேசவும் கூடிய உரிமையை இந்த கொடி குடிமகன்களுக்குத் தந்திருக்கிறது. ஆனால், இன்று இந்த கொடி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது," என்றார் ராகுல் காந்தி.


தாக்குதலுக்கு உள்ளான ஜனநாயக நிறுவனங்கள்

"இந்தியா என்பது எல்லோர் மீதும் திணிக்கப்பட்ட தனிப்பட்ட தத்துவம் அல்ல. இந்தியா என்பது இந்த நாட்டில் உள்ள எல்லா குடிமகனின் மொழி, பண்பாடு, கலாசாரம். இதுதான் இந்தியா. இந்தியா என்ற நிறுவனம்தான் இந்த கொடியை பாதுகாக்க வேண்டும்.
இந்தியா என்ற தத்துவம் மற்றும் குரலை மூவர்ண கொடி பாதுகாக்க வேண்டும். ஆனால், இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக நிறுவனமும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பால் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது.
அவை, இந்த கொடியை தங்களுடைய சொத்தாக கருதுகின்றன. தனிப்பட்ட முறையில் தங்களால் மட்டுமே இந்த நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று அவை நினைக்கின்றன.
இந்த நாட்டில் உள்ள எதிர்கட்சிகளை அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றைக் கொண்டு அச்சுறுத்தப் பார்க்கிறார்கள் (மத்தியில் ஆளும் பாஜக). இந்தியர்களை இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இந்தியர்கள் ஒருபோதும் அச்சப்பட மாட்டார்கள். எத்தனை மணி நேரம் நீங்கள் (மத்திய அரசு) விசாரணை அறையில் வைத்திருந்தாலும் ஒரு நாளும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். இந்திய நாட்டில் எந்தவொரு எதிர்கட்சித் தலைவரையும் இதுபோன்று அடைத்து வைத்து விசாரித்து அச்சுறுத்த முடியாது.
மதம், மொழி போன்றவற்றின் பெயரால் இந்த நாட்டை பிளவுபடுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இந்த நாடு எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கும் என்று ராகுல் காந்தி பேசினார்.
மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் பொருளாதாரம்

இந்தியா இன்று வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத வேலையில்லா திண்டாட்டத்தை நாடு எதிர்கொண்டு பேரழிவை நோக்கி நாடு நகர்ந்து கொண்டு இருக்கிறது.
ஆனால், துரதிருஷ்டவசமாக ஊடக நண்பர்கள் மெளனமாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் இது புரிகிறது. ஆனால், தொலைக்காட்சிகளில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை பற்றி காட்ட மாட்டார்கள். அவர்கள் நம்முடைய பிரதமரிந் முகத்தை மட்டும்தான் தொலைக்காட்சியில் காட்டுவார்கள்.
பாஜக அரசாங்கம் திட்டமிட்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர தொழில் நிறுவனங்களை நடத்துவோரை நசுக்கி வருகிறது. குறிப்பிட்ட ஒரு சில பெரு நிறுவனங்களின் பணக்கார தொழிலதிபர்கள் மட்டுமே இந்த நாட்டின் பொருளாதாரத்தை தங்களுடைய கைகளுக்கு உள்ளே வைத்திருக்கிறார்கள். துறைமுகங்கள், நிலக்கரி, விமான நிலையங்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையும் அந்த ஒரு சில பெரும் பணக்காரர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
அவர்களின் ஆதரவு இல்லாமல் நமது பிரதமரால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அவர்கள் ஊடகங்களை கைகளில் வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் பிரதமரின் படம் ஊடகங்களில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துகிறார்கள். அதற்கு கைமாறாக அவர்களுக்கு வேண்டியவற்றை பிரதமர் உறுதிப்படுத்துகிறார். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, விவசாய எதிர்ப்பு சட்டங்கள் என அனைத்தும் இந்த சில தொழிலதிபர்களின் பணத்தை காக்கவே மேற்கொள்ளப்படுகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவை பிரித்தாளும் முயற்சியை மேற்கொண்டு நாட்டின் வளத்தை திருடினார்கள். அந்த பாணியைத்தான் இந்தியாவில் தற்போது ஆளும் மோதி அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி உலக பொருளாதாரத்தை கையில் வைத்துக் கொண்டு செல்வாக்கு செலுத்தியது போல இன்றைக்கு இந்தியாவில் உள்ள ஒரு சில பெருநிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
இந்தியாவின் எதிர்காலத்தை அபகரிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு என அனைத்தின் நோக்கமும் பெரு முதலாளிகளின் வளத்துக்காகத்தான் என்று ராகுல் காந்தி பேசினார்.
"நாட்டில் உள்ள வேளாண் குடிமக்கள் உயிர் வாழவே போராடுகிறார்கள். இந்த சூழலில் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். நமது இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியாத சூழலில், விலைவாசி விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது. எனவே, நாம் வரலாற்றில் இல்லாத மிக மோசமான காலகட்டத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். எனவே, இந்த தருணத்தில் இந்தியர்கள் அனைவரையும் ஒற்றுமையாக இணைப்பதையும் அவர்களை ஒற்றுமையாக திரட்டுவதையும்தான் இந்த பாரத ஒற்றுமை என்ற நெடும் நடைபயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், பாஜக செய்வது போல இந்த நாட்டு மக்களின் குரலை நசுக்க நாங்கள் விரும்பவில்லை. அந்த மக்களின் ஞானத்தை கேட்டறிய நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்த யாத்திரையை நடத்துகிறோம்," என்றார் ராகுல் காந்தி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
117 பேருடன் 3,570 கிமீ பாத யாத்திரையை அடுத்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் முடிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரை அடுத்த 150 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
முன்னதாக, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் "வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன். என் அன்பான நாட்டை நான் இழக்க மாட்டேன்," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
தலைமை ஏற்க அழைப்பு
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை தெரிவித்தார்.சோனியாவோ, ராகுலோ கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர்களாக கருதப்படுவோரில் முன்னணியில் பேசப்படுபவர் அசோக் கெலாட்.


"காந்தி குடும்பத்தின் மிகப் பெரிய குணமே, அவர்கள் கட்சியின் நலனுக்காக முடிவுகளை எடுப்பவர்கள்," என்று கெலாட் தெரிவித்தார். "ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியினரும் ஏன் கூறுகிறார்கள்? இன்றும், ராகுல் காந்தியின் பின்னால் ஏன் காங்கிரஸ் தொண்டர்கள் திரள்கிறார்கள் தெரியுமா? காரணம், அவர் தலைவரானால் மட்டுமே கட்சி ஒற்றுமையாக இருக்கும்" என்று கன்னியாகுமரியில் 'பாரத் ஜோடோ யாத்திரை' தொடங்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெலோட் கூறினார்.
பாஜக விமர்சனம்
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையை விமர்சித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "அகண்ட பாரதத்தை" நோக்கி காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
1947இல் இந்தியாவை பாகிஸ்தானாகவும் பின்னர் வங்காளதேசமாகவும் காங்கிரஸ் பிரித்தது. பிரிவினை குறித்து ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தால், பாரத் ஜோடோவால் எந்தப் பயனும் இல்லை. பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்யுங்கள். இந்தியா ஏற்கெனவே அப்படியேதான் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, சில்சார் முதல் செளராஷ்டிரா வரை இந்தியா ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இதே கருத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலையும் எதிரொலித்தார். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வந்தால் அது காங்கிரஸுக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால், அவர் தலைவரானால் அது பாஜகவுக்கு நல்லதுதான் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












