இந்தியா - பாகிஸ்தான் மோதல்: தற்போதைய கள நிலவரம் 10 படங்களில்

ஜம்முவில் மே 10, 2025 அன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகையை காட்டும் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜம்முவில் மே 10, 2025 அன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட புகையை காட்டும் படம்

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உள்பட்ட காஷ்மீரில் உள்ள ''பயங்கரவாத இலக்குகளை'' குறிவைத்து தாக்கியதாக இந்தியா கூறியது.

இந்தியாவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையிலான பதற்றம் அதிகரித்தது.

இதனை தொடர்ந்து ஜம்மு, பஞ்சாப் போன்ற எல்லையோர பகுதிகளில், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேபோல பாகிஸ்தானும் இந்தியா தங்கள் நாட்டுக்குள் 3 விமானப்படைத் தளங்களை தாக்கியதாக கூறியுள்ளது.மேலும் இந்தியாவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


ஜம்முவில் ஒரு குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதலில் சேதமடைந்த வாகனங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜம்முவில் ஒரு குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதலில் சேதமடைந்த வாகனங்கள்
பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளை அகற்ற உதவும் ஒரு பணியாளர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளை அகற்ற உதவும் ஒரு பணியாளர்
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இந்திய ஏவுகணைகள் தாக்கிய நூர் கான் விமானப்படை தளத்திற்கு வெளியே பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் காணப்படுகிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராவல்பிண்டியில் இந்திய ஏவுகணை தாக்கியதாக பாகிஸ்தான் கூறும் நூர் கான் விமானப்படை தளத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினர் காணப்படுகிறார்கள்

பாகிஸ்தான் அதிவேக ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், அவை அனைத்தையும் முறியடித்து விட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியா கூறியுள்ளது.

மே 8, 2025 அன்று பஞ்சாப் அமிர்தசரஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வயலில் கிடந்த ஏவுகணை பாகம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மே 8, 2025 அன்று பஞ்சாப் அமிர்தசரஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வயலில் கிடந்த ஏவுகணை பாகம்.
ஜம்முவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தை பார்க்கும் மக்கள்
படக்குறிப்பு, ஜம்முவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தை பார்க்கும் மக்கள்
பாகிஸ்தான் தாக்குதல் அச்சத்தால், ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பும் ஒரு குடும்பம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் தாக்குதல் அச்சத்தால், ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பும் ஒரு குடும்பம்

பாகிஸ்தானின் 3 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த கூற்று குறித்து இந்தியா இதுவரை ஏதும் கூறவில்லை.

பிபிசியால் இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை


இன்று காலை ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் நெரிசல் மிகுந்த ரயிலில் ஏற ஒரு பெண் போராடும் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்று காலை ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் நெரிசல் மிகுந்த ரயிலில் ஏற ஒரு பெண் போராடும் படம்
வான் தாக்குதல் குறித்து ஒலி எழுப்பும் சைரன் டெல்லியில் நிறுவப்பட்டு சோதிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வான் தாக்குதல் குறித்து ஒலி எழுப்பும் சைரன் டெல்லியில் நிறுவப்பட்டு சோதிக்கப்பட்டது
பாகிஸ்தான் தாக்குதல் அச்சத்தால் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்ட ஸ்ரீநகர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் தாக்குதல் அச்சத்தால் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்ட ஸ்ரீநகர்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு