லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் - கைக்கெட்டிய வெற்றியை கோட்டை விட யார் காரணம்?

பட மூலாதாரம், IPL
- எழுதியவர், க போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவர், கடைசி பந்துவரை எதுவுமே உறுதியில்லை. எந்த பந்திலும் ஆட்டத்தின் போக்கு மாறும், வெற்றிக்கான அந்த தருணம் கிடைக்கும் என்பதற்கு இன்றைய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியே சிறந்த உதாரணம்.
லக்னெளவில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 30வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
டாஸ் வென்று குஜராத் அணி முதலில் பேட் செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது.
லக்னெளவுக்கு பாதிப்பா
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 போட்டிகளில் 4வது வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது, நிகர ரன் ரேட்டும் உயர்ந்துள்ளது. லக்னெள ணி 7 போட்டிகளில் 3வது தோல்வியை சந்தித்தபோதிலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது. இருப்பினும் மற்ற அணிகளைவிட ஒரு போட்டி கூடுதலாக விளையாடிவிட்டது லக்னெளவுக்கு கடைசி நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
நம்பமுடியாத வெற்றி

பட மூலாதாரம், IPL
இந்த போட்டியில் வெற்றி பெறுபெறுவோமா என்று குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். ஏனென்றால், 135 ரன்களை வைத்துக்கொண்டு வலிமையான லக்னெள அணியை டிஃபெண்ட் செய்வது கடினம் என்றுதான் ரசிகர்கள் நினைத்தனர்.
அதற்கு ஏற்றார்போல் லக்னெள அணியின் பவர்ப்ளே ஆட்டம், ரன்ரேட் அனைத்தும் வேகமாவே சென்றது. ஆனால், கடைசி 5 ஓவர்களில்தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. பொதுவாக டி20 போட்டிகளி்ல் கடைசி 5 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணிக்கும், பந்துவீசும் அணிக்கும் முக்கியமானது. அதை குஜராத் டைட்டன்ஸ் அணி கச்சிதமாகப் பயன்படுத்தியது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
தோல்வி ஏன்?
கடைசி 5 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் அளித்த நெருக்கடி, ரன்குவிப்பில் ஏற்பட்ட மந்தம், பவுண்டரிகள் இல்லாதது லக்னெள பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி நெருக்கடியில் தள்ளியது.
ஒரு கட்டத்தில் பந்துகளும், தேவைப்படும் ரன்களும் சமநிலையில் இருந்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பந்துகள் குறைவாகவும், தேவைப்படும் ரன்ரேட் எகிறத் தொடங்கியது. இது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதால், பெரிய ஷாட்கள் அடிக்க முயன்றபோது விக்கெட்டுகளை இழந்தனர்.
திக்..திக்.. கடைசி ஓவர்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அதிலும் கடைசி ஓவரைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் லக்னெள வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் பந்தை சந்தித்த கேஎல் ராகுல் 2 ரன் சேர்த்தார். 2வது பந்தில் ராகுல்(68) ஸ்குயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஸ்டாய்னிஷ் லாங்ஆன் திசையில் பவுண்டரி அடிக்க அங்கு நின்றிருந்த மில்லர் அதை கேட்ச் பிடிக்கவே டக்அவுட்டில் வெளியேற்றினார்.
4-வது பந்தில் ஹூடா 2 ரன் எடுக்க முற்பட்டபோது, பதோனி(8) ரன் அவுட் ஆகினார். 5வது பந்தில் தீபக்ஹூடா 2 ரன்கள் சேர்க்க முற்பட்டு அவரும் ரன் அவுட் ஆகினார். 4 பந்துகளில் 4விக்கெட்டுகளை பதற்றத்தில் லக்னெள பேட்ஸ்மேன்கள் இழந்தனர்.
சோக்கர்ஸ்-லக்னெள
கடைசி நேரத்தில் ஏற்பட்ட பதற்றம், நெருக்கடியைச் சமாளிக்கும் திறன் வீரர்களிடம் இல்லாதது லக்னெள பேட்ஸ்மேன்களை “சோக்கர்ஸ்” ஆக சித்தரித்தது. கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியைத்தான் “சோக்கர்ஸ்” என்று அழைப்பார்கள். இப்போது லக்னெள அணிக்கும் அந்த பெயர் வந்துவிட்டதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.
50 டாட் பந்துகள் சரியான அணுகுமுறையா
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
ஒரு கட்டத்தில் லக்னெள அணி 49 பந்துகளில் 35 ரன்களே தேவைப்பட்டது, கைவசம் 9 விக்கெட்டுகளை வைத்து வெற்றியை பாக்கெட்டில் வைத்திருந்தது. இதில் குஜராத் அணி வீரர்களும் 2 கேட்சுகளை கோட்டைவிட்டனர். இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருந்தும் லக்னெள பக்கம் தோல்வி சென்றது என்றால் “வான்டட்டாக வந்து தோல்வி வண்டியில்” ஏறியதாகவே கூற வேண்டும்.
இந்த போட்டியில் லக்னெள பேட்ஸ்மேன்கள் மட்டும் 50 டாட் பந்துகளை விட்டுள்ளனர், அதாவது ஏறக்குறைய 8 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் அடிக்காமல் டெஸ்ட் போட்டி போன்று ஆடியுள்ளனர்.
கடைசியாக 12-வது ஓவரில் லக்னெள அணி பவுண்டரி அடித்தது, அதன்பின் ஆட்டத்தின் முடிவுவரை பவுண்டரி அடிக்காமல் இருந்ததே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.
இதுபோன்ற குறைவான ஸ்கோரை சேஸிங் செய்யும்போது, அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து, ரன்ரேட்டை குறையவிடாமல் வைத்திருக்க வேண்டும். ஆனால் லக்னெள அணி வெறும் ஒற்றை, இரட்டை ரன்களை மட்டுமே நம்பி பயணித்தது, தோல்வியில் தள்ளியது.
தோல்விக்கு ராகுல் காரணமா?

பட மூலாதாரம், @gujarat_titans ·
இந்த ஆட்டம் நடந்த லக்னெள ஆடுகளம் மிகவும் மந்தமான, குறைந்த ஸ்கோர் அடிக்கும் மைதானமாகும். இந்த ஆடுகளத்தில் 150 ரன்கள் சேர்த்தாலே எதிரணியை டிபெண்ட் செய்ய முடியும். அப்படி இருக்கும்போது வெற்றிக்கு அருகே வந்தபோதும்கூட லக்னெள கேப்டன் கேஎல்.ராகுல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.
அதிலும் கேப்டன் ராகுல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி 38 பந்துகளில் அரைசதம் எட்டினார். செட்டில் ஆன பேட்ஸ்மேனாக ராகுல் களத்தில் இருந்தபோது, 12வது ஓவர் முதல் 19வது ஓவர் வரை பவுண்டரி, சிக்ஸர் அடிக்கும் ரிஸ்க்கை ராகுல் எடுக்காதது தோல்விக்கு இட்டுச் சென்றது.
புதிதாக ஒரு பேட்ஸ்மேன் களத்துக்கு வந்து ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பேட்டிங் செய்ய சிறிது நேரமாகும். ஆதலால், செட்டில் பேட்ஸ்மேன் ராகுல் பவுண்டரி, சிக்ஸர் அடித்து நெருக்கடியை குறைக்க தவறியதே தோல்விக்கு முதன்மையான காரணமாகும்.
ஏறக்குறைய 45 பந்துகள் எந்தவிதமான பவுண்டரி, சிக்ஸர் இல்லாமல் லக்னெள அணி எந்தவிதமான அசட்டு நம்பிக்கையில் வெற்றியை நோக்கி பயணித்தது எனத் தெரியவில்லை.
கடைசி 6 ஓவர்களில் வெறும் 23 ரன்கள் மட்டும் சேர்த்த லக்னெள அணி, கடைசி 22 ரன்களுக்குள் மட்டும் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.
என்ன சொல்கிறார் கே.எல்.ராகுல்?

பட மூலாதாரம், Getty Images
தோல்வி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில் “ என்ன பேசுவதென்றே தெரியவில்லை, வார்த்தைகள் வரவில்லை. எப்படி இந்த தோல்வி நடந்தது என எனக்குத் தெரியவில்லை, இந்த தோல்வி விரைவாக நடந்துவிட்டது. வெற்றி எங்கள் பாக்கெட்டில் இருந்தபோது, எங்கு தவறவிட்டோம் என்று நான் சிந்திக்க முடியாது. பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் இன்று சிறப்பாகச் செயல்பட்டோம். 135 ரன்கள் என்பது, சேஸிங் செய்துவிடக்கூடிய ஸ்கோர்தான்.
ஆடுகளத்தின் தன்மையை நன்கு பயன்படுத்திக்கொண்டோம், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நன்றாகவே தொடங்கினோம். ஆனால், இந்த தோல்வி எப்படி நடந்தது எனச் சொல்ல முடியவில்லை. 4 வெற்றிகளுடன் பயணிக்கிறோம். வெற்றியை நோக்கி சென்றோம், ஆனால், வலுவான பேட்டிங்கை கடைசிவரை நான் வெளிப்படுத்தவில்லை. நூர் முகமது, ஜெயந்த் இருவரும் நன்றாகப் பந்துவீசினர். புதிதாக களத்துக்கு வரும் பேட்ஸ்மேன்கள் எளிதாக ஷாட்களை ஆட இந்த ஆடுகளம் உகந்தது அல்ல. பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். பவுண்டரிகள் அடிக்கும்வாய்ப்பை தவறவிட்டது தோல்விக்கான காரணம்” எனத் தெரிவித்தார்.
ஏன் முதலில் பேட்டிங்?
இந்த ஐ.பி.எல். தொடரில் சேஸிங் என்பது டிரண்டாக இருக்கும்போது, லக்னெள மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிகள் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகின்றன. அதிலும் குறிப்பாக பகலில் நடக்கும் போட்டிகளில் முதலில் பேட் செய்யவே விரும்புகின்றன.
இதற்கு முக்கியக் காரணம் பனிப்பொழிவு இல்லை, 2வதாக லக்னெளவில் நடந்த 6 டி20 போட்டிகளில் 5 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன என்பதால் ஹர்திக் பாண்டியாவும் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி சேஸிங் செய்து வென்றதுதான் விதவிலக்காகும்.
எப்படி வென்றது குஜராத் அணி?

பட மூலாதாரம், Getty Images
லக்னெள ஆடுகளம் கறுப்பு மண் கலந்த பிட்ச். இதுபோன்ற கரிசல்மண் ஆடுகளம் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், மெதுவாகப் பந்துவீசுவோருக்கு ஏற்றதாகவே இருக்கும். இதனால்தான், குஜராத் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்துவீச்சாளர்களை நம்பி களத்தில் இறங்கினார்.
135 ரன்கள் என்பது குஜராத் அணியால் டிபெண்ட் செய்யக் கூடிய ஸ்கோர் இல்லை என்பது ஹர்திக் பாண்டியாவுக்குத் தெரியும். இருப்பினும், களத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றி சாதுர்யமாகப் பயன்படுத்தியது, சுழற்பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தி நெருக்கி ஏற்படுத்தியது, கட்டுக்கோப்பான பீல்டிங், குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களை புத்திசாலித்தனமாப் பயன்படுத்தியது வெற்றிக்கு உதவியது.
லக்னெள கையில் சென்ற வெற்றியை பறித்து வந்து குஜராத்திடம் வழங்கியதில் முகமது ஷமி, நூர் முகமது, மோகித் சர்மா ஆகிய பந்துவீச்சாளர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
அபாரமான பந்துவீச்சு
குறிப்பாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் முகமது, 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் எடுத்து 18 ரன்கள் கொடுத்தார்.
மோகித் சர்மா 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இவர்களின் பங்களிப்பு பாண்டியாவை பெருமூச்சுவிடச் செய்தது. அதிலும் மோகித் சர்மாவின் துல்லிய யார்கர்கள், ஸ்லோவர் பால், ஷமி வீசிய 19வது ஓவரில் 5 ரன்கள் ஆகியவை லக்னெளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
குஜராத்தும் சளைக்கவில்லை

பட மூலாதாரம், Getty Images
குஜராத் அணியின் பேட்டிங்கிலும் விருதிமான் சாஹா(47) ஹர்திக் பாண்டியா(66) ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாகப் பங்களிப்புச் செய்யவில்லை. சுப்மான் கில்(0), அபினவ் மனோகர்(3),விஜய் சங்கர்(10) மில்லர்(6) என ஏமாற்றம் அளித்தனர். பேட்ஸ்மேன்கள் ஓரளவு பொறுப்புடன் பேட் செய்திருந்தால் ஸ்கோர் இன்னும் 20ரன்கள் உயர்ந்திருக்கும்.
குஜராத் அணியும் பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை. ஏறக்குறைய 42 டாட் பந்துகளை விட்டனர், அதாவது 7 ஓவர்களில் ரன் அடிக்கவில்லை. இந்த 7 ஓவர்களையும் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் ஸ்கோர் 175 ரன்களை எட்டியிருக்கும்.
“அவர் வார்த்தையை நம்பினேன்”

பட மூலாதாரம், Getty Images
வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ 2 போட்டிகள் தோல்விக்குப்பின் வெற்றி கிடைத்துள்ளது. எதை உன்னிடம் எடுத்தேனோ அதை உன்னிடம் திருப்பிக்கொடுப்பேன் என்று இறைவன் கூறியுள்ளார். அதுபோலத்தான் சூழல் அனைத்தும் இன்றும் திடீரென்று மாறியது.
விக்கெட்டுகளை மளமளவென எடுத்தபோது, எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது. இந்த டி20 தொடரில் ஒரு தோல்வி உங்கள் நம்பிக்கையை உடைக்கும், ஆனால், இதுபோன்ற வெற்றி அதற்கு மாறுபட்டதாக இருக்கும். இன்னும் நாங்கள் 10 ரன்கள் கூடுதலாக சேர்த்திருக்க வேண்டும்.
புதிய பேட்ஸ்மேன்கள் வந்து ஆடுவது இந்த ஆடுகளத்தில் கடினம் என்பதால், விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த யுத்தியை கையில் எடுத்தோம். 30 பந்துகளில் 30 ரன்கள் என்ற நிலையில் லக்னெள அணியை வெல்லும் என நினைத்தேன். ஆனால், சிறிய தவறுகூட போட்டியில் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்பதை உணர்ந்தேன், ஆட்டத்தில் மாற்றம் நிகழ்ந்தது. மோகித், ஷமி, ஜெயந்த், நூர் சிறப்பாகப் பந்துவீசினர்” எனத் தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியாவும் அவரின் இயல்பான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தவில்லை. கடைசி நேரத்தில் பிஷ்னாய் ஓவரில் 2 சிக்ஸர்கள், பவுண்டரி அடிக்காமல் இருந்திருந்தால், அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும், அணியின் ஸ்கோரும் குறைந்திருக்கும்.
பாவம் பிஷ்னாய்
லக்னெள சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் நிலைமைதான் மோசம். குஜராத் அணி சேர்த்த 135 ரன்களில் 49 ரன்கள் அதாவது 33 சதவீதம் ரவி பிஷ்னாய் ஓவரில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒருவேளை பிஷ்னாய் சிக்கனமாகப் பந்துவீசியிருந்தால், ஆட்டம் திசைமாறியிருக்கும்.
நம்பிக்கையை இழக்கவில்லை

பட மூலாதாரம், LSG
ஆட்டநாயகன் வென்ற மோகித் சர்மா கூறுகையில் “ எதுவும் ஸ்பெஷலாகச் செய்யவில்லை, இயல்பாகவே செயல்பட்டேன். அனுபவத்தை பயன்படுத்தினேன். வெற்றியோ, தோல்வியை கடமையை மட்டும் சரியாகச் செய் என்பதையே செயல்படுத்துகிறோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.
முதல் ஓவர், முதல் பந்தில் இருந்தே ஹர்திக் பாண்டியா வெற்றி நம்பக்கம் இருக்கிறது என்று கூறி வந்தார். அந்த நம்பிக்கைதான் வெற்றிக்கு ஆதாரம். கட்டுக்கோப்பாக, நெருக்கடிதரும்விதத்தில் பந்துவீச வேண்டும் என்ற எனது திட்டங்களை செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். நான் வீசிய ஸ்லோவர் பால், யார்கர், ஸ்லோவர் பவுன்ஸர் ஆகியவற்றை லக்னெள பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












