You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோட்டாபய ராஜபக்ஷ 10 நாளில் சாதித்தவை என்ன? இலங்கை அரசு என்ன சொல்கிறது?
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு 10 வந்து நாட்களில் செய்துள்ள பணிகள் என்னென்ன என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டது.
ஊடகப் பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன வெளியிட்ட அந்த அறிக்கையில் இருந்த தகவல்கள்:
1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதிப் பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல்.
2. 15 சதவீதமாகக் காணப்பட்ட வெட் வரியினை 8 சதவீதமாகக் குறைத்தல்.
3. தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 சதவீதம் குறைத்தல்.
4. அரச நிறுவனத் தலைவர்களின் நியமனத்துக்கு சிறப்பு வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளல்.
5. அரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக அரச இலச்சினையை காட்சிப்படுத்தல்.
6. இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்கள் எண்ணிக்கை 16ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுமென மக்களுக்கு வாக்குறுதி அளித்தல்.
7. சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம்.
8. ஒன்பது மாகாணங்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்தினர் ஏற்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டமை.
9. பெரும்பான்மை வாக்கு வங்கி பற்றிய நம்பிக்கையை வெளியிடல் மற்றும் அதனுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஏனைய இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தல்.
10. இந்தியா, சீனா போன்ற உலகின் வல்லரசு நாடுகள் இலங்கைக்கு வருகை தந்து, தம்மீது நம்பிக்கை வைத்து தமது தனித்துவத்தை மதிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.
11. ஜனாதிபதியின் ஆளணியினர், வாகனத் தொடரணி ஆகியவற்றை மட்டுப்படுத்தல் மற்றும் ஜனாதிபதி அவர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லமாக தனது தனிப்பட்ட வசிப்பிடத்தை தேர்ந்தெடுத்தல்.
12. கோதுமை மா கட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக ஏனைய இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பளித்தல்.
பிற செய்திகள்:
- பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவி கூட்டு வன்புணர்வு: போக்ஸோ சட்டத்தில் 4 பேர் கைது
- திடீரென ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பரவிய எச்.ஐ.வி: பாகிஸ்தானில் சோகம்
- வீட்டின் முன்வாசல் விழுப்புரம், பின்வாசல் கள்ளக்குறிச்சி - ஒரு வீடு; இரு மாவட்டங்கள்
- "நாங்கள் அச்சப்படுகிறோம்": அமித்ஷா முகத்துக்கு நேரே மோதி ஆட்சியை விமர்சித்த ராகுல் பஜாஜ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்