கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள், மஞ்சள் கலந்த பால், நெல்லிக்கனியை எடுத்துக் கொள்ளலாம் - மத்திய அரசு

பட மூலாதாரம், Dani_Solare / getty
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகள், சியவன்பிரஷ், மஞ்சள் கலந்த பால், முலேத்தி தூள், அஷ்வகந்தா மற்றும் நெல்லிக்கனி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆயுஷ் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்காக வெளியிடப்பட்ட வழிமுறைகளில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு உடல் சோர்வு, உடல் வலி, இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சு விடுவதில் லேசான சிரமம் ஆகியவை தென்படலாம் என்று இந்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 78,399 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,702, 595ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விகிதம் 77.88ஆக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், தங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்
"வெதுவெதுப்பான நீரை தேவையான அளவு பருக வேண்டும். ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி சாப்பிடலாம். உடல்நலம் சரியாக இருந்தால், சாதாரண வீட்டு வேலைகளை செய்யலாம். அலுவலகப் பணிக்கு படிப்படியாக திரும்பலாம்" என்று சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கொரோனாவில் இருந்து மீண்டு வரும் காலத்தில், "சியவன்பிரஷ், ஆயுஷ் க்வத், மஞ்சள் கலந்த பால், சம்ஷமனி வடி, கிலோய் தூள், அஷ்வகந்தா, நெல்லிக்கனி, முலேத்தி தூள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். உப்பு மற்றும் மஞ்சள் கலந்து வாய் கொப்பளிப்பதும் நல்ல பலனைதரும் என்று நம்பப்படுகிறது. தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே இவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்," என்று வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யோகாசனா, பிரானாயாமா மற்றும் தியானம் போன்ற லேசான உடற்பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், "குணமடைந்து வருபவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்வது சிறந்தது. போதிய அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம். புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"தொடர்ந்து வறட்டு இருமல் இருந்தால், உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிப்பது அல்லது சாதாரண நீரில் ஆவி பிடிக்கலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல், சொல்ல முடியாத நெஞ்சு வலி, இருக்கிறதா என ஆரம்பக் கட்டத்திலேயே கண்காணிக்க வேண்டும். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை தாண்டியுள்ளது. 78,586 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
- சீனா விஷயத்தில் நேரு செய்த அதே தவறை பிரதமர் மோதியும் செய்கிறாரா?
- இஸ்ரேல் – பஹ்ரைனுக்கு இடையே உடன்படிக்கை - வரலாற்று முக்கியத்துவம் பெறுவது ஏன்?
- நீட்: நரேந்திர மோதி அரசை பகைத்துக்கொள்ள அதிமுக விரும்பவில்லையா?
- ஃபாத்திமா ஷேக்: பெண் கல்விக்காக பாடுபட்ட வரலாற்றில் பெரிதும் அறியப்படாத பெண்
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: 300 சொற்களில் எளிய விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












