கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி

கிருஷ்ணா ஆற்றில் நிகழ்ந்த படகு விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டதில் உள்ள இப்ராஹிம்பட்டணம் ஃபரிகாட் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதியில், இன்று (ஞாயிற்றுகிழமை) மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் 6 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள்.

விபத்துக்குள்ளான படகில் 38 பேர் பயணித்து இருக்கிறார்கள்.

இந்த விபத்தில் இறந்த 11 பேரும் ஓங்கோல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

தேசிய பேரிடர் மீட்பு படை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதி விஜயவாடாவிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த சுற்றுலா படகு `ரிவர் பே` என்னும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.

சந்திரபாபு நாயுடு வருத்தம்:

கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி

இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா மாவட்ட ஆட்சியரிடம் பேசிய சந்திரபாபு நாயுடு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சுற்றுலா கழகம் தலைவர் ஜெயராம் ரெட்டி, விஜயவாடா போலீஸ் கமிஷனர் கவுதம் சவாங் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :