நடிகர்கள் அரசியல் தலைவர் ஆவதை எதிர்க்கிறாரா பிரகாஷ்ராஜ்?

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இன்று(ஞாயிற்றுகிழமை) பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர்கள் தலைவராவது என்னுடைய நாட்டுக்குப் பேரழிவு என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்தக் கருத்து, மறைமுகமாக ரஜினி மற்றும் கமலை பிரகாஷ்ராஜ் விமர்சிப்பதாக பேசப்பட்டது.
இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், பிரகாஷ்ராஜ் தன்னுடைய கருத்து திரிக்கப்பட்டுள்ளதாக அவருடைய ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்.
அவர், "நடிகர்கள் தங்களின் பிரபலத்தின் காரணமாக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. அது மிகப்பெரிய பேரழிவாக இருக்கும். அவர்களுக்கு, இந்த நாடு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து சரியான புரிதல் இருக்க வேண்டும் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். நாமும் வெறும் ரசிகர்களாக மட்டும் வாக்களிக்க கூடாது. ஒரு பொறுப்பான குடிமகனாக வாக்களிக்க வேண்டும்"
இதைதான் நான் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சொன்னேன். ஆனால், இந்த கருத்து திரிக்கப்பட்டு, தவறான பொருளில் புரிந்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அதை தெளிவுப்படுத்ததான் இதை பதிவிடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- டெல்லியை 'விஷவாயு கூண்டு` போல மாற்றிய நச்சுப்புகை!
- 'வயசு என்னை அழகா மாத்திடுச்சு'
- கேட்டலோனியா தேர்தல்: களம் இறங்கும் ஸ்பெயின் பிரதமர்; தொடரும் மக்கள் போராட்டம்
- கிம் ஜாங் உன்னை 'குள்ளமான, குண்டு' நபர் என்று அழைத்த டிரம்ப்
- குஜராத் தேர்தல்: பாஜகவின் முன் உள்ள சவால்கள் என்ன ?
- ''செளதியில் உள்ள லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது?''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









