கோட்டாபய மாளிகை நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் - ராணுவம், போலீஸ் வெளியேறியது - புகைப்பட தொகுப்பு

கொழும்பு போராட்டம்
படக்குறிப்பு, ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் போராட்டக்காரர்கள்

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் நோக்குடன் கொழும்பு நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கில் மக்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர். இந்த நிலையில், போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்.

அங்குள்ள பிரதான அறைகள், நீச்சல் குளம் என எல்லா முக்கிய இடங்களுக்கும் போராட்டக்காரர்கள் சென்றனர்.

அங்குள்ள களச் சூழலை விவரிக்கிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், AFP via Getty Images

கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை போராட்டம்
படக்குறிப்பு, ஜனாதிபதி மாளிகை நுழைவாயில் கேட் மீது ஏறி குதிக்கும் போராட்டக்காரர்கள்
கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு

பட மூலாதாரம், AFP

கொழும்பு போராட்டம்

பட மூலாதாரம், Tharaka Basnayaka/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லத்திற்கு அருகே ஜனாதிபதி பதவி விலகக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, போஸீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் சிதறி ஓடும் மக்கள்.
கொழும்பு போராட்டம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கொழும்பில் நடைபெற்று வரும் அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கலைக்க தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் போலீஸார்.
கொழும்பு போராட்டம்

பட மூலாதாரம், Pradeep Dambarage/NurPhoto via Getty Images

கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
படக்குறிப்பு, போலீஸாரின் கண்ணீர் புகைகுண்டு வீச்சு காரணமாக ஏற்பட்ட கண்ணெரிச்சலால் முகத்தை தண்ணீரால் கழுவும் போராட்டக்காரர்கள்
கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
இலங்கை போராட்டம்

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA/AFP via Getty Images

கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
படக்குறிப்பு, கொழும்பு செட்டியார் தெருவில் பேரணியாக சென்ற இளைஞர்கள்
கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
படக்குறிப்பு, இலங்கையில் நீடித்து வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சாலைகளில் வெகு குறைவாகவே வாகனங்கள் செல்கின்றன. மற்றவர்கள் மிதிவண்டிகளை போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்றனர். பலரும் நேற்றிரவு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிறகு புறநகர்ப் பகுதிகளில் இருந்து தலைநகர் கொழும்பில் உள்ள போராட்ட பகுதிகளுக்கு நடந்தே வந்தனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்பு என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு மற்றும் பல முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை காவல்துறை அமல்படுத்தியது.

கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
படக்குறிப்பு, ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் நோக்குடந் கொழும்பு புறக்கோட்டை சந்திப்பில் திரண்டுள்ள மக்கள்

ஆனால் அத்தகைய நடவடிக்கை சட்ட விரோதம் என்று கூறிய சட்டத்தரணிகள் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் ஆட்சேபித்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் அந்த ஊடரங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
படக்குறிப்பு, போராட்ட பகுதியில் இஸ்லாமிய பெண்ணுக்கு தண்ணீர் வழங்கி உதவி செய்யும் பெளத்த பிக்கு

நகரின் பல இடங்களில் கலவரத் தடுப்பு போலீஸாரும் ராணுவத்தினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லத்தை இணைக்கும் எல்லா சந்திப்புகளையும் போலீஸார் தடுப்புகளைக் கொண்டு அடைத்துள்ளனர்.

கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
கொழும்பு மக்கள் கண்ணீர் புகை குண்டு வீச்சு
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: