இலங்கை நெருக்கடி: கொளுத்தப்பட்ட வாகனங்கள், தொடரும் பதற்றம் - தற்போதைய நிலையை விளக்கும் படங்கள்

இலங்கை வன்முறையில் எரிக்கப்பட்ட வாகனத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று கூறப்படுவோர் இந்த போராட்டம் நடந்து வந்த இடத்துக்கு சென்று தாக்கத் தொடங்கியதை அடுத்து இரண்டு தரப்புக்கும் மோதல் மூண்டது.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகல் கடிதம் அளித்தார். ஆனாலும் வன் செயல்கள் தொடர்ந்தன.

மஹிந்த ராஜபக்ஷ பூர்வீக இல்லம் உள்பட பல ஆளும் கட்சித் தலைவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. இன்று மே 10ம் தேதி காலை மஹிந்தவின் பதவி விலகல் ஏற்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதையடுத்து நாட்டில் பதற்றம் தொடர்ந்து வருகிறது.

மே 9, திங்கள்கிழமை தொடங்கிய வன்செயல்களின் தாக்கத்தையும், நாட்டின் தற்போதைய நிலையையும் காட்டும் புகைப்படங்கள் இதோ:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு அருகில் எரிந்த நிலையில் கிடக்கும் வாகனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு அருகில் எரிந்த நிலையில் கிடக்கும் வாகனம்
எரிக்கப்பட்ட பேருந்துகள்
படக்குறிப்பு, போராட்க் காரர்களைத் தாக்கிய மஹிந்த ஆதரவாளர்கள் வந்ததாக கருதப்பட்ட பேருந்து. எரித்து நீர்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
எரிந்த வாகனம்
படக்குறிப்பு, எரிக்கப்பட்ட கார்.
நேற்று (மே 9) எடுக்கப்பட்ட படம் இது. அரசுக்கு எதிராக போராடிய புத்த துறவி காயமடைந்த நிலையில், அவருக்கு கத்தோலிக்க பாதிரியார்கள் உதவி செய்கின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேற்று (மே 9) எடுக்கப்பட்ட படம் இது. அரசுக்கு எதிராக போராடிய புத்த துறவி காயமடைந்த நிலையில், அவருக்கு கத்தோலிக்க பாதிரியார்கள் உதவி செய்கின்றனர்
இலங்கையில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தீயூட்டப்பட்ட பேருந்துகள், இன்று இவ்வாறு காட்சியளிக்கின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் நேற்று நடைபெற்ற வன்முறையில் எரியூட்டப்பட்ட பேருந்துகள்.
இலங்கை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸை நேற்று போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர். தற்போது அங்கு காவல் இருக்கும் ராணுவ சிப்பாய் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ குடியிருப்பான டெம்பிள் ட்ரீசில் நேற்று போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர். தற்போது அங்கு காவல் இருக்கும் படையினர் ஒருவர்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பிற்கு வெளியே குவிந்திருக்கும் பாதுகாப்பு படையினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்புக்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்
வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சோதிக்கும் பாதுகாப்பு படையினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சோதிக்கும் பாதுகாப்பு படையினர்
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையின் தற்போதைய நிலை.
படக்குறிப்பு, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையின் தற்போதைய நிலை.
அலரி மாளிகை அருகே வெறிச்சோடியிருக்கும் சாலை.
படக்குறிப்பு, அலரி மாளிகை அருகே வெறிச்சோடியிருக்கும் சாலை.
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: