நிர்மலா சீதாராமன்: ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி வரை கடன் உத்தரவு’

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், ANI

கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க உதவும் வகையில் பல அறிவுப்புகளை இன்று வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரின் அறிவிப்பு:

  • எட்டு பொருளாதார மீட்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் நான்கு முற்றிலும் புதியது. ஒன்று சுகாதார கட்டமைப்பிற்கானது. கொரோனா பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி கடன் உத்தரவு வழங்கப்படும். சுகாதார துறைக்கு 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • இந்த வருடம் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான செலவு 93,869 கோடி ரூபாய். பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்திற்கு 2 லட்சத்து 27,841 கோடி ரூபாய் செலவிடப்படும்.
  • சர்வதேச சுற்றுலா துறையை புதுப்பிக்க, முதலில் வரும் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா நபர்களுக்கு விசா கட்டணம் கிடையாது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். அல்லது ஐந்து லட்சம் விசாக்கள் வழங்கப்படும் வரை இருக்கும். இந்த சுற்றுலா விசாவின் அனுமதி காலம் ஒரு மாதம்.
  • மேலும் 11 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் சுற்றலா சார்ந்த நிறுவனங்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படும்.
  • அவசரநிலை கடனளிப்பு உத்தரவாத திட்டத்திற்கு மேலும் 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • குழந்தைகள் மற்றும் அவர்களின் நலத்தை வலியுறுத்தி அவசர கால தயாரிப்புகளுக்காக பொது சுகாதார துறைக்கு 23, 220 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • புதிய கடன் உத்தரவு திட்டத்தின் மூலம், சிறுநிதி நிறுவனங்கள் வழியாக தனி நபர் ஒருவருக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான வட்டி ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி 2 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும்.
  • பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் ரோஸ்கார் திட்ம் 2022ஆம் ஆண்டு மார்ச் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :