விவசாயிகள் போராட்டம்: ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவு இந்திய உள்விவகார தலையீடா?

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமர்

இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பெயர் கடந்த செவ்வாய்க்கிழமை செய்திகளில் அதிகம் அடிபட்டது.

மோதி அரசின் புதிய விவசாய சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராடிவரும் இந்த விவசாயிகள் மீதான இந்திய பாதுகாப்புப் படையினரின் அணுகுமுறை குறித்து ட்ரூடோ கவலை தெரிவித்ததோடு, தனது அரசு எப்போதும் அமைதியான போராட்டங்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.

ட்ரூடோவின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ட்ரூடோவின் அறிக்கையை, "அரைகுறையானது, உண்மைக்கு அப்பாற்பட்டது" என்று வர்ணித்தார்.

இந்த நிலையில், கனடா பிரதமரின் கருத்து தேவையற்றது மற்றும் ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது போன்றது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டத்தை தான் கவனிக்காவிட்டால் அது தனது அலட்சியப்போக்காக இருக்கும்" என்று கனடாவில் வாழும் சுமார் ஐந்து லட்சம் சீக்கியர்களுக்கு குரு நானக் தேவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தான் வெளியிட்ட ஒரு ஆன்லைன் செய்தியில் ட்ரூடோ கூறியிருந்தார்,

"நிலைமை கவலை அளிக்கிறது. போராட்டம் நடத்திவரும் எல்லா விவசாயிகளின் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து அக்கறை கொண்டுள்ளேன். அமைதியான எதிர்ப்புக்கான உரிமை குறித்து கனடா எப்போதும் விழிப்புடன் இருப்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை நான் நம்புகிறேன். இது குறித்து இந்திய அதிகாரிகளுடன் நேரடியாக பேசியுள்ளேன்,"என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

தூதாண்மை பேச்சுவார்த்தைகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்று ட்ரூடோவின் அறிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கருத்து தெரிவித்தார்.

கனடா பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஸ்டின்

ட்ரூடோவின் கருத்துக்கு இந்தியா பதிலடி

ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து குறித்து இந்தியாவில் சமூக ஊடகங்களில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் வெளியாயின.

"கனடா பிரதமர் ட்ரூடோ ஒரு ஜனநாயகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை ஆதரித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் . உலகத் தலைவர்கள் அனைத்து நாடுகளிலும் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாக பேசுவது மிகவும் முக்கியமானது. உள் விவகாரத்தில் தலையீடு என்று சொல்பவர்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை, '' என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அதே நேரத்தில், மூத்த பத்திரிகையாளர் வீர் சாங்வி ட்ரூடோவின் அறிக்கையை விமர்சித்துள்ளார். "விவசாயிகளின் போராட்டம் பற்றி எனது கருத்து என்னவாக இருந்தாலும், ட்ரூடோவின் அறிக்கை எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாட்டின் தலைவராக தனது அறிக்கை உலகளவில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதை ஜஸ்டின் ட்ரூடோ அறிவார். தனது சீக்கிய ஆதரவாளர்களை மகிழ்விக்கவே இதை அவர் செய்துள்ளார்," என்று அவர் தனது ட்வீட் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவில் நம்மிடையே பல கருத்துவேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, நான் இந்த அரசின் ஆர்வலன் அல்ல. ஆனாலும், உள்நாட்டு பிரச்சனைகளை நாம்தான் தீர்க்கவேண்டும் என்ற கொள்கையுடன் நான் இருக்கிறேன். இந்த அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே பல இந்தியர்கள் நமது உள் விவகாரங்களில் மேற்கத்திய தலையீட்டை வரவேற்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்ற வரம்பை ட்ரூடோ மீறியுள்ளதாக வீர் சாங்வி நம்புகிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"உலகின் பெரும்பாலான தலைவர்கள் இந்த வரம்பை மதிக்கிறார்கள். இந்தியாவுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக தனது நாட்டின் சீக்கியர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் ட்ரூடோ உறுதியாக இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில் அவரது அறிக்கையில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்தியாவின் ஆட்சேபணையும் இயல்பானது. இந்தியாவில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட ட்ரூடோவின் கருத்துக்களை ஏற்கவில்லை. இது உள் விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர். வேறு எவருக்கும், குறிப்பாக மேலை நாடுகளுக்கு, நமது உள் விவகாரங்களை எவ்வாறு தீர்க்கவேண்டும் என்று சொல்ல உரிமை இல்லை என்ற ஜவஹர்லால் நேருவின் வழியை இந்தியாவின் பெரும்பாலான தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், " என்கிறார் சாங்வி.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷம்மா முகமதும் ட்ரூடோவின் கருத்துக்களை ஒரு ட்வீட்டில் விமர்சித்துள்ளார். "நான் மோதி அரசின் விவசாய சட்டத்திற்கு எதிரானவள். ஏனெனில் அது நமது விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நமது உள் விவகாரங்களில் தலையிட உரிமை அளிக்கவில்லை. நாம் ஒரு இறையாண்மை நாடு. நமது பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது நமக்குத் தெரியும்,"என்று ஷாமா முகமது குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதி , 'இந்த முறையும் டிரம்ப் அரசு' என்ற கோஷத்தை ஆதரிக்க முடியும் என்றால், ட்ரூடோவை கேள்வி கேட்பது எவ்வளவு தூரம் சரியானது என்று சிலர் சமூக ஊடகங்களில் வாதிடத் தொடங்கினர்.

ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கை இந்திய அரசின் தூதாண்மை தோல்வி என்று முன்னாள் இந்தியதூதர் கேசி சிங், மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்துடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறினார்.

ட்ரூடோ, காலிஸ்தான் என்ற கற்பனையில் உள்ளவர்களின் பிடியின் கீழ் வந்திருந்தால், இது நடக்காமல் பார்த்துக்கொள்வது அரசின் வேலை என்று அவர் கூறினார். எத்தனை நாடுகளுக்குச் சென்று இது பற்றி போராடுவீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"நீங்கள் கனடா பிரதமரிடம் அவருக்கு உண்மை தெரியாது என்று சொல்கிறீர்கள். உண்மை என்னவென்றால், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க டெல்லிக்கு வர விரும்பினர். நீங்கள் அவர்களை வர அனுமதிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று ட்ரூடோ கூறியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக மோதி வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களை உள்நாட்டு அரசியலுக்காக பயன்படுத்துகிறார். அத்தகைய சூழ்நிலையில், அந்த நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர், இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்து தங்கள் கருத்தை கொண்டிருக்க முடியும். போராடுபவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் கவலைப்படுவதாக ட்ரூடோ கூறியுள்ளார். இதை ட்ரூடோ தவறான சந்தர்ப்பத்தில் கூறியது முற்றிலும் உண்மை. அவர் இந்த கருத்தை, குரு நானக் ஜெயந்தியன்று சொல்லியிருக்கக்கூடாது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் இயக்கம் குறித்தும் ட்ரூடோ பேசினார். வருங்காலத்தில் பைடன் ஏதாவது சொன்னால், அவரிடமும் சண்டைக்கு செல்வீர்களா?" என்று கே.சி. சிங் வினவுகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

சீக்கிய பிரிவினைவாதம் மற்றும் கனடாவின் அரசியல்

கனடாவில் சீக்கிய வாக்கு வங்கி முக்கியத்துவம் வாய்ந்தது. ட்ரூடோவின் லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி மற்றும் ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் சீக்கிய வாக்காளர்கள் மிகவும் முக்கியம். இங்குள்ள சீக்கிய மக்கள் தொகை சுமார் ஐந்து லட்சமாகும். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகளில் சீக்கிய பிரிவினைவாதம் அதாவது காலிஸ்தான் ஒரு முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது.

2018 பிப்ரவரியில் ட்ரூடோ ஏழு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். அந்தப் பயணத்திலும் பதற்றம் தெரிந்தது. ட்ரூடோவின் வருகை பற்றி அதிகமாக தெரிவிக்கப்படவில்லை. இந்திய அரசு அவருக்கு சிறப்பு கவனமும் அளிக்கவில்லை. உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் பிரதமருக்கு இந்தியா எந்த இணக்கத்தையும் காட்டவில்லை என்று இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் கூறப்பட்டது.

சீக்கியர்கள் மீதான தாராள மனப்பான்மைக்காக கனேடிய பிரதமர் , ஜஸ்டின் சிங் ட்ரூடோ என்றும் அழைக்கப்படுகிறார். காலிஸ்தான் கிளர்ச்சிக் குழு கனடாவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோ அத்தகைய குழுக்களுக்கு அனுதாபம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது அமைச்சரவையில் உள்ள சீக்கியர்களின் எண்ணிக்கை இந்தியாவின் அமைச்சரவையில் கூட இல்லை என்று 2015 ஆம் ஆண்டில், ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். ட்ரூடோவின் அமைச்சரவையில் அப்போது நான்கு சீக்கிய அமைச்சர்கள் இருந்தனர்.

ட்ரூடோவின் நிகழ்சியின் விருந்தினர் பட்டியலில் சீக்கிய பிரிவினைவாதி!

பஞ்சாபில் அமைச்சராக இருந்த மல்கியத் சிங் சித்து, 1986 இல் கனடாவின் வான்கூவரில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார். இந்த நேரத்தில் கனேடிய சீக்கிய பிரிவினைவாதி ஜஸ்பால் சிங் அட்வால், மல்கியத் சிங்கை கொலைசெய்ய முயன்றார். மல்கியத் சிங்கிற்கு குண்டடிபட்டது. ஆனாலும் அவர் உயிர் தப்பினார். இந்த வழக்கில் ஜஸ்பால் சிங் அட்வால் கொலை முயற்சி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டில் ட்ரூடோ இந்தியாவுக்கு வந்தபோது ஜஸ்பால் சிங் அட்வால் , அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியின் விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். பிப்ரவரி 20 அன்று மும்பையில், ட்ரூடோவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கனேடிய பிரதமரின் மனைவியுடன் ஜஸ்பால் சிங் அட்வால் காணப்பட்டார். பிரதம மந்திரி ட்ரூடோ தனது இந்திய பயணத்தின் போது தன்காரணமாக வெட்கக்கேட்டை சந்திக்க நேர்ந்ததாக அட்வால் பின்னர் வருத்தப்பட்டார்.

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

சீக்கியர்கள் கனடாவை எவ்வாறு அடைந்தார்கள்?

1897 ஆம் ஆண்டில், விக்டோரியா மகாராணி பிரிட்டிஷ் இந்திய வீரர்களின் ஒரு குழுவை வைர விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள லண்டனுக்கு அழைத்தார். அப்போது இந்திய ராணியுடன் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு ஒரு குதிரைப்படை வீரர்கள் குழு சென்று கொண்டிருந்தது. இந்த வீரர்களில் மேஜர் கேசர் சிங் ஒருவர். கனடாவுக்கு குடியேறிய முதல் சீக்கியர் அவர்.

சிங்குடன் வேறு சில வீரர்களும் கனடாவில் தங்க முடிவு செய்தனர். அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவை தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்டார். மீதமுள்ள வீரர்கள் இந்தியா திரும்பியபோது அவர்களிடம் ஒரு கதை இருந்தது. பிரிட்டிஷ் அரசு அவர்களை அங்கு குடியேற்றவிரும்புகிறது என்று இந்தியா திரும்பிய பின்னர் அவர்கள் தெரிவித்தனர். இப்போது விஷயம் சொந்த விருப்பமாக மாறியது. இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் கனடா செல்லும் செயல்முறை இங்கிருந்து தொடங்கியது. சில ஆண்டுகளில், பிரிட்டிஷ் கொலம்பியாவை 5,000 இந்தியர்கள் அடைந்தனர். அவர்களில் 90 சதவிகிதம் பேர் சீக்கியர்கள்.

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், கனடாவில் குடியேற்றுவதும் அங்கு வளர்ச்சியடைவதும் சீக்கியர்களுக்கு எளிதாக இருக்கவில்லை. அவர்களின் வருகையும் வேலைகளுக்கு அவர்கள் செல்வதும் கனடாவின் வெள்ளை இனத்தவர்களுக்கு பிடிக்கவில்லை. இந்தியர்களுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கின. கனடாவில் நீண்ட காலம் பதவியில் இருந்த பிரதம மந்திரி வில்லியம் மெக்கென்சி கூட நகைச்சுவையாக, "இந்துக்களுக்கு இந்த நாட்டின் காலநிலை பிடிப்பதில்லை," என்று கூறினார்.

1907 வாக்கில் இந்தியர்களுக்கு எதிரான இனத் தாக்குதல்கள் தொடங்கின. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து குடியேறுபவர்களை தடை செய்ய ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

கனடாவுக்கு வரும்போது இந்தியர்களிடம் 200 டாலர்கள் இருக்க வேண்டும் என்று முதல் விதி அமல் செய்யப்பட்டது. இருப்பினும், ஐரோப்பியர்களுக்கு இந்த தொகை வெறும் 25 டாலர்கள் மட்டுமே.

ஆனால் அதற்குள் இந்தியர்கள் அங்கே குடியேறிவிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சீக்கியர்கள். பல சிரமங்கள் இருந்தபோதிலும், தங்கள் கனவுகளை கைவிட அவர்கள் தயாராக இல்லை.

அவர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கனடாவில் தங்களை நிரூபித்துக்காட்டினர். அவர்கள் ஒரு வலுவான சமூக கலாசாரத்தை உருவாக்கினர். பல குருத்வாராக்களையும் அமைத்தனர்.

ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

சீக்கியர்கள் எதிர்கொண்ட சவால்கள்

சீக்கியர்கள் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டனர். 1914 ஆம் ஆண்டில், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் நிறைந்த 'கோமாகாடா மாரு' என்ற கப்பல் கொல்கத்தாவில் உள்ள பஜ் பஜ் படித்துறையை அடைந்தது.

இவர்களில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். இந்தியர்கள் நிறைந்த இந்த கப்பல் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. கப்பலில் இருந்த இந்தியர்கள் தொடர்பாக இரண்டு மாதங்கள் முட்டுக்கட்டை நிலவியது. இதற்காக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2016 ல் கனடாவின் நாடாளுமன்ற அவையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மன்னிப்பு கேட்டார்.

1960 களில் கனடாவில் லிபரல் கட்சி அரசு ஆட்சிக்கு வந்தபோது அது சீக்கியர்களுக்கும் மிகவும் சாதகமாக அமைந்தது. கனடாவின் கூட்டணி அரசு, புலம்பெயர்வோர் தொடர்பான விதிகளில் மாற்றங்களைச் செய்து, பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதற்கான கதவுகளைத் திறந்தது.

இதன் விளைவு என்னவென்றால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் தொகை வேகமாக அதிகரித்தது. இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கனடாவுக்கு செல்லத் தொடங்கினர். இன்றும் கூட இந்தியர்கள் கனடா செல்வதை நிறுத்தவில்லை.

இன்றைய காலகட்டத்தில் கூட்டணிக்கட்சியான என்டிபியின் கடிவாளம் இந்திய-கனேடியர்களின் கைகளில் உள்ளது. கனடாவில் பஞ்சாபி மூன்றாவது பிரபலமான மொழியாகும். கனடாவின் மொத்த மக்கள்தொகையில் 1.3 சதவிகிதம் பேர் பஞ்சாபியைப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :