ரஜினி: ஜனவரியில் புதிய கட்சி தொடக்கம் - தமிழக கட்சிகள் கருத்து என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமது அரசியல் கட்சியை 2021 ஜனவரி மாதத்தில் தொடங்கப் போவதாக தற்போது டிவிட்டரில் அறிவித்துள்ளார் ரஜினி காந்த்.
கட்சி தொடங்கும் தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சற்று முன் வெளியான அந்த ட்வீட்டில் "வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்" என்று அச்சிடப்பட்ட ஒரு வாசகத்தையும் படம் எடுத்துப் பகிர்ந்துள்ளார் ரஜினி.
மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
என்ற இரண்டு ஹேஷ்டேக்குகளை தமது ட்வீட்டில் பயன்படுத்தியுள்ள ரஜினி கடைசியில் தமது படத்தின் மூலம் புகழ்பெற்ற பாபா முத்திரையைக் காட்டும் எமோஜியைப் போட்டு தமது ட்வீட்டை முடித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கடந்த திங்கள்கிழமை சென்னையில் நடந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த தமது முடிவை விரைவில் அறிவிக்கப்போவதாக தெரிவித்தார்.
தற்போது கட்சி தொடங்குவதை உறுதிப்படுத்தியுள்ள அவர், கட்சி தொடங்குவதற்கு தேதி அறிவிப்பதற்கான தேதியையும் அறிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு வெளிவந்த பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சரியான முடிவை ரஜினி எடுத்துள்ளார். அவரது வசனப்படி இது - லேட்டு, ஆனால், லேட்டஸ்ட். வாழ்த்துகள் ரஜினி. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகம் ஆன்மிக அரசியலாக மாறும்" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ரஜினியின் அரசியல் அறிவிப்பை பாஜகவில் சமீபத்தில் சேர்ந்த நடிகை குஷ்புவும் வரவேற்றுள்ளார், கடைசியில் நீங்கள் அரசியலுக்கு வந்து விட்டீர்கள். உங்களுடைய புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
ஆனால் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிடுவதில் பிரபலமான மார்கண்டேய கட்ஜூ, ரஜினிய அரசியலுக்கு வருவதில் என்ன இருக்கிறது, அவரால் வெகுஜன பிரச்னைகளை சமாளிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
நடிகர் லாரனஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி தலைவா, இந்த தருணத்துக்காக காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
இசை அமைப்பாளர் அனிருத், "இனி தான் ஆரம்பம், தலைவர் ஆட்டம் ஆரம்பம்" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
ரஜினியின் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு திரைத்துறையினரும் வரவேற்பு தெரிவித்து சமூக ஊடக பக்கங்களில் வாழ்த்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
அரசியல் கட்சிகள் கருத்து என்ன?
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்டது. ஆனால், நடிகர் ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு விவரத்தை முழுமையாக அறியாமல் அது பற்றி பேச விரும்பவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
இதேவேளை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "சிறந்த திரைப்பட நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை பெரிதும் வரவேற்கிறோம். அவரது (ரஜினியின்) வரவு நல்வரவு ஆகட்டும். வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம். வாய்ப்பிருந்தால் கூட்டணி அமையும்," என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பால் மாநிலத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கான வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. அவை எங்கும் செல்லப்போவதில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் ரஜினிக்கு மனபூர்வ வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆன்மிகம் எடுப்படும். ஆனால் ஆன்மிக அரசியல் எடுபடாது. ரஜினியின் கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னணி
2017 டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்.
அதற்குப் பிறகும் கட்சி தொடங்குவது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் கடந்த மார்ச் மாதம், சென்னையிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.

'தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் அப்போதுதான் அரசியலுக்கு வருவேன்' என்றும் ரஜினிகாந்த் அப்போது தெரிவித்திருந்தார்.
கடிதம் - விளக்கம்
அதை தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வந்த நிலையில்தான், கொரோனா காலத்தில் தமது உடல்நிலை வெளியே வந்து மக்களை சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக ரஜினியே தெரிவிப்பது போல சமூக ஊடகங்களில் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் பரவின.
இதுகுறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்." என ரஜினிகாந்த் அப்போது தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள் :
- "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
- விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் எங்கே? அய்யாக்கண்ணு என்ன செய்கிறார்?
- முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது - தொடரும் சர்ச்சை வரலாறு
- சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன் - அசத்தும் தமிழக வீரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












