மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வை நிராகரிக்க போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

போலந்து பயணத்தின் கடைசி நாளில், மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வை நிராகரிக்க வேண்டும் என்று கத்தோலிக்க இளைஞர்களை போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம்,
உலக நாடுகளிலிருந்து வந்திருந்த இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களிடம் உரையாற்றிபோது, எல்லைகளை தடைகளாக பயன்படுத்த மறுக்கும் புதிய மனித குலமாக உருவாக திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.

பட மூலாதாரம், Getty
இன்றைய தொழில்நுட்ப மொழியை பயன்படுத்திய போப் பிரான்சிஸ், நல்லதொரு இதயத்தை தரவிறக்கம் செய்யவும், உடனடி நுகர்வுக்கு பதிலாக உலகை மாற்ற முயலவும் ஊக்கமூட்டினார்.

பட மூலாதாரம், EPA
கராகோவின் புறவெளியில் திறந்தவெளியில் நடைபெற்ற திருப்பலியின்போது, புனித பயணிகள் கொடிகளை அசைத்து கொண்டும், இசைக்கு ஏற்ப அசைந்தாடியும், தங்களை தாங்களே புகைப்படங்கள் எடுத்தும் திருவிழா சூழ்நிலை உருவாகியிருந்தது.

பட மூலாதாரம், EPA
இந்த திருப்பலியானது, போப் பிரான்சிஸ் கிழக்கு ஐரோப்பாவிற்கு முதல்முறை வந்துள்ள பயணத்தின் ஐந்து நாட்கள் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

பட மூலாதாரம், AP
இதன் போது போப் பிரான்சிஸின் அஸ்விட்ச் சித்திரவதை முகாம் சந்திப்பும் அடங்குகிறது.








