பிட்காயின் மோசடி: ஹேக் செய்யப்பட்ட பில்கேட்ஸ், ஒபாமா உள்ளிட்ட அமெரிக்க விஐபி ட்விட்டர் கணக்குகள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க பில்லினியர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகளும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் டிவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டன.
`பிட்காய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் அனுப்புமாறு கோரப்பட்டது.
"எல்லாரும் என்னை பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி அனுப்புகிறேன்" என பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன.
இதற்கு பதில் நடவடிக்கையாக `வெரிஃவைட்` கணக்குகள் எனப்படும் நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகள் பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியது டிவிட்டர் நிறுவனம்.
கடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹேக் செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகளால் தற்போது ட்வீட் செய்யமுடியும் எனவும் ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் பணியாற்றி வருவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் பதியப்பட்ட ட்வீட்டுகள் காரணமாக சில நிமிடங்களில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த டிவிட்டர் கணக்குகள் மில்லியன் கணக்கான பின்தொடர்வோரைக் கொண்டுள்ளவை.
''தனியார் நிறுவனங்களுக்கு சலுகை, விவசாயிகளுக்கு கடன் மறுப்பு ஏன்?''

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கொரோனா காலத்தில், வட்டியை செலுத்தாததால், புதிய கடன்களை கொடுக்க கூட்டுறவு வங்கிகள் மறுப்பதாக டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பெரு முதலாளிகளிடம் காட்டப்படும் பெருந்தன்மையை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் காட்ட தவறிவிட்டதாக விவசாயிகள் விமர்சிக்கின்றனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜுலை 17-ஆம் தேதியன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
கடனுக்கான வட்டியை செலுத்தினால்தான் புதிய கடனை அளிக்கமுடியும் என்ற விதி இருப்பதால், சிக்கல் நீடிப்பதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
100-ல் உலகில் என்ன மாற்றங்கள் நிகழும்?

பட மூலாதாரம், Empics
உலகளவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்து வருவது, சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இதனால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை குறையும்.
2100-ம் ஆண்டில் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23 நாடுகளில் நாடுகளில் மக்கள் தொகை பாதியாகக் குறையும் எனக் கருதப்படுகிறது.
மேலும் இந்த நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். புதிதாகப் பிறக்கும் குழந்தைகளை விட, 80 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
விரிவாக படிக்க:'பிறப்பு விகிதம் குறைவு: 2100-ல் உலகில் என்ன மாற்றங்கள் நிகழும்?
ஜியோவில் முதலீடு செய்யும் கூகுள்

பட மூலாதாரம், Getty Images
கூகுள் நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் ரூபாய் 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
ஜியோ - கூகுள் கூட்டு
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. முதல்முதலாக இந்த கூட்டம் மெய்நிகர் கூட்டமாக நடக்கிறது.
இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
ஜியோ நிறுவனத்தின் 7.7% பங்குகளை ரூ.33, 737 கோடி முதலீடு செய்து கூகுள் நிறுவனம் வாங்குகிறது என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
`ஜெயலலிதாவின் வேதா இல்லம்: நினைவு இல்லமாக மாற்ற தடை இல்லை'
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக்க தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டில் மறைந்த நிலையில், அவரது வீட்டை நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பான அரசாணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவின் வீடு அமைந்திருந்த போயஸ் கார்டன் பகுதியில் வசித்தவர்கள் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.
விரிவாக படிக்க:ஜெயலலிதாவின் வேதா இல்லம்: நினைவு இல்லமாக மாற்ற தடை இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












