You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடி அகழ்வில் தமிழக அரசும் இணைந்து செயல்பட உரிமம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு பிறப்பித்திருந்த இந்த உத்தரவில், தமிழக அரசுக்கு இரண்டு வார காலத்திற்குள் உரிமம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி தொடுத்திருந்த இந்த வழக்கில், கீழடியில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கக் கோரியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதேப்போல கீழடியில் நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியை காலதாமதம் செய்யக்கூடாது எனவும், கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிரிஷானாவை மீண்டும் இங்கேயே பணியமர்த்த வேண்டும் என்றும் கனிமொழிமதி தொடர்ந்து கோரி வருகிறார்.
இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் சூழலில்தான், நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என அந்த அமர்வு கூறியுள்ளது.
கீழடி அகழாய்வுகளைத் தொடர கோரிக்கை
பிற செய்திகள்
- 'கிம் ஜாங் உன்' மீம்ஸ், ஏவுகணை சோதனை - வடகொரியா சென்ற பெங்களூரு எஃப் சி வீரரின் சுவாரஸ்ய அனுபவம்.
- தாய்மை, உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு உருக்கமான திறந்த கடிதம் எழுதிய செரீனா வில்லியம்ஸ்!
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்
- கொல்கத்தா கிரிக்கெட்: இந்தியாவின் அசத்தல் வெற்றி எப்படி சாத்தியமானது?
- 'மெர்சல்': இந்தியா முழுவதும் வைரலாகும் முன்னோட்டக் காட்சி
- கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்