கீழடி அகழ்வில் தமிழக அரசும் இணைந்து செயல்பட உரிமம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பட மூலாதாரம், M K STALIN
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு பிறப்பித்திருந்த இந்த உத்தரவில், தமிழக அரசுக்கு இரண்டு வார காலத்திற்குள் உரிமம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை 3 வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி தொடுத்திருந்த இந்த வழக்கில், கீழடியில் கண்டெக்கப்பட்ட பழமையான பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கக் கோரியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதேப்போல கீழடியில் நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியை காலதாமதம் செய்யக்கூடாது எனவும், கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிரிஷானாவை மீண்டும் இங்கேயே பணியமர்த்த வேண்டும் என்றும் கனிமொழிமதி தொடர்ந்து கோரி வருகிறார்.
இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் சூழலில்தான், நடைபெறவுள்ள 4 ஆம் கட்ட அகழாய்வு பணியில் தமிழக அரசும் இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என அந்த அமர்வு கூறியுள்ளது.
கீழடி அகழாய்வுகளைத் தொடர கோரிக்கை
பிற செய்திகள்
- 'கிம் ஜாங் உன்' மீம்ஸ், ஏவுகணை சோதனை - வடகொரியா சென்ற பெங்களூரு எஃப் சி வீரரின் சுவாரஸ்ய அனுபவம்.
- தாய்மை, உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு உருக்கமான திறந்த கடிதம் எழுதிய செரீனா வில்லியம்ஸ்!
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்
- கொல்கத்தா கிரிக்கெட்: இந்தியாவின் அசத்தல் வெற்றி எப்படி சாத்தியமானது?
- 'மெர்சல்': இந்தியா முழுவதும் வைரலாகும் முன்னோட்டக் காட்சி
- கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













