You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மறக்கடிக்கப்பட்ட பிரபல ஓவியர்களின் படைப்புகள்
செப்டம்பர் மாத தொடக்கத்தில் நடந்த இரண்டு கண்காட்சிகள் 1920களின் பிற்பகுதி மற்றும் 1930களில் கலை உலக பிரபலங்களான, லண்டனின் கிழக்குப் பகுதியை சேர்ந்த தொழிலாளர் வர்க்க கலைஞர்களின் குழுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
இந்த கண்காட்சிகளில் இடம்பெற்ற பல படைப்புகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மறக்கடிக்கப்பட்டன எனபது குறிப்பிடத்தக்கது.
இந்த குழுவினர் கிழக்கு லண்டன் குரூப் என அழைக்கப்பட்டனர், அவர்களது அணிகளின் மத்தியில், எளிமையான அலுவலக எழுத்தாளர்கள், ஒரு கடற்படை ஊழியர் , ஒரு சாளர துப்புரவாளர், ஒரு கடை உதவியாளர், ஒரு அச்சுப்பொறி, ஒரு கூடை நெய்தவர் மற்றும் ஒரு சிறிய பையன் ஆகியோர் இருந்தனர்.
தற்போது இவர்களின் படைப்புகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சவுத்தாம்ப்டனில் தங்கள் பணிக்கு அர்ப்பணித்துள்ள ஒரு கண்காட்சி, மற்றும், மற்றொன்று, கிழக்கு லண்டனில், குழந்தைகளின் எழுத்தாளர் மைக்கேல் ரோசனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும்
அவர்களுக்கு முறையான கலைக் கல்விப் பயிற்சி இல்லாத போதிலும், அவர்கள் தயாரித்த ஓவியங்கள் மிக நுட்பமானவையாக இருந்தன.
மைல் எண்ட் அண்ட் போவ் பகுதியில், மாலை வகுப்புகளில், ஜான் கூப்பர் என்ற ஒரு உற்சாகமான ஆசிரியரின் தூண்டுதலால் , அவர்கள் லண்டனின் தொழில்துறை சார்ந்த, வறுமையால் பாதிக்கப்பட்ட கிழக்கு லண்ட்டில், தங்களை சுற்றி அவர்கள் பார்த்தவற்றையெல்லாம் ஓவியமாக வரைந்தனர்.
பெரும்பாலும் அவர்களின் ஓவியங்கள்,கால்வாய்கள், ரயில்வே பாலங்கள், மாடி வீடுகள் மற்றும் ஸ்க்ர்பீ தோட்டங்கள் ஆகியவற்றின் புகை மூடிய காட்சிகளை கொண்டதாக இருந்தன.மற்றும் அவர்களின் ஓவியங்கள்,உலகை பற்றிய மிக முக்கியமான பதிவாகும்
1930 களில் எட்டு ஆண்டுகளாக அவர்கள் லண்டனின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தக கலைக் கலைக்கூடங்களில் ஒன்றான மேஃபேரில் உள்ள அலெக்ஸ் ரீட் & லெஃபெவெரில் ஒரு வருடாந்திர கண்காட்சியை நடத்தினர். செல்வம்மிக்க கலை சேகரிப்பாளர்கள் குழுவின் ஓவியங்களை வாங்கினர். மேலும் விமர்சகர்கள் அவர்களை பற்றி விமர்சித்தனர்.
இந்த குழு பற்றிய ஒரு புத்தகத்தை எழுதிய டேவிட் பக்மேன், தி டைம்ஸ் மற்றும் டெய்லி மெயில் போன்ற முன்னணி பத்திரிகைகளில் இதைப் பற்றி அதிகப்படியான செய்திகள் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்.
ஹரோல்ட் ஸ்டேக்ல்ஸ் ஒரு வழக்கறிஞரின் எழுத்தராக பணிபுரிந்தார்; அவரது சகோதரர் வால்டர் ஒரு கப்பல் நிறுவனத்திற்கு வேலை செய்தார். ஒவ்வொரு நாளும் அவர்கள் ரோம்ஃபோர்ட்டிலிருந்து நகரத்திற்குச் சென்றார்கள்,
பின்னர் சாட்வெல் ஹீத், தேனீர் அருந்த சென்றார்.ஒரு வாரத்திற்கு மூன்று மாலைப் பொழுதுதுகளுக்கு பின்னர் கூப்பர் வகுப்புகளுக்காக கிழக்குப் பகுதிக்குச் சென்றார்கள்.
இப்போது 100 வயது நிரம்பிய வால்தாமின் மாமியாரும் அவர்களது சகோதரியுமான டிலி,தங்களுக்கு ஒரு "ஸ்டூடியோ"- தங்கள் வீட்டில் ஒரு அறை இருந்ததாக நினைவுக்கூறுகிறார். சில நேரங்களில் தங்கள் சிறிய சகோதரி அவர்கள் வேலை செய்வதை பார்க்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
இந்த சகோதரர்களின் வெற்றியானது, அவர்களை ஒரு கார் வாங்க முடிந்ததே ஆகும்.அவர்களது நண்பரான எல்வின் ஹவ்தொர்ன் மற்றும் அவரது மனைவி லிலின் ஆகியோரும் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்.அவர்கள் ஓவியம் வரைவதற்காக நாடு முழுவதும் சுற்றி, தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டனர்.
இந்த குழுவின் மற்றொரு முன்னணி உறுப்பினர் ஆல்பர்ட் துர்பின் ஆவார். இவர் சாளரத்தின் துப்புரவாளர், போர்க்குணமிக்க போர்வீரன் மற்றும் போர் கலைஞர், சோசலிஸ்ட் கொள்கையை பின்பற்றுபவர் , தொழிலாளர் கவுன்சிலர் மற்றும் பேத்னால் க்ரீன் பகுதியின் போருக்குப் பிந்தைய மேயராக இருந்தவர்
அவரது பணி bow பகுதியில் உள்ள நன்னெரி கேலரியில், இரண்டாவது கண்காட்சியின் மையத்தில் உள்ளது. ஹரோல்ட் ஸ்டேகெல்ஸ் (இடதுபுறம்) ஒரு வழக்கறிஞரின் எழுத்தராக பணியாற்றினார், அவருடைய சகோதரர் வால்டர் ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்தார்
கவர்ச்சியற்ற இடங்களில் பார்த்தவற்றை வலியுறுத்தும் விதமாக அந்த ஓவியங்கள் அமைந்ததால், அந்த குழுவின் வேலை ஆச்சரியமளிப்பதாக மைக்கேல் ரோஸன் கூறுகிறார்.
டர்பின் மற்றும் அவரது மனைவி சாலி ஆகியோரால் போரின் முடிவில் இரண்டு வயதானபோது தத்தெடுக்கப்பட்ட டர்பினின் மகள் ஜோன் பர்கர், எப்போதும் தனது குடும்பத்தினர், தனது சக கவுன்சிலர்கள் மற்றும் தன்னை சுற்றியுள்ள தெருக்களை ஓவியம் வரைந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரை நினைவுகூர்கிறார்.
போர் முடிந்தபிறகு, அவர், இடிபாடுகளுக்கு உள்ளான கட்டடங்களையும் ,அவை சரிசெய்யப்பட்டு பின் இருக்கும் கட்சியையும் வண்ணம் தீட்டினார்.
பார்க்கர், தனது தந்தையின் போருக்கு முந்தைய ஸ்க்ராப்புக் புத்தகத்தில், கவுன்சிலர் "டிக்" மற்றும் டர்பின் பற்றிய செய்தித்தாள் துணுக்குகள் மற்றும் ஓஸ்வால்ட் மோஸ்லியின் பாசிச கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடிய செய்திகளும் நிறைந்திருந்தன.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவருடைய ஓவியங்களுள் பெரும்பான்மையானவை மறைந்துவிட்டன.
1920 ,1930 மற்றும் 1940களில் இருந்த அவரது தந்தையின் ஓவியங்கள் அதிக அளவில் எரிந்துபோயின.
ஆனால் காணாமல் போனது, டர்பினின் ஓவியங்கள் மட்டும் அல்ல
ட்விட்டர் பீட் ஒன்றை நடத்திவரும் வால்தம், 700க்கும் மேற்பட்ட கிழக்கு லண்டன் குழு ஓவியங்கள் 1930 களில் கண்காட்சியில் வைக்கப்பட்டது என்று கூறுகிறார். அவர்களில் 113 பேரை தான் கண்டறிந்ததுவிட்டதாக அவர் கூறினார்.
அவற்றுள் சில ஓவியங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் பல ஓவியங்கள், சுவர்கள் மீது அடையாளம் காணப்படாமால் தொங்கிக்கொண்டிருக்கின்றன, அவை மீண்டும் கண்டெடுக்கப்படும் என்ற காத்திருப்போடு.
பிற செய்திகள்:
- போர் பிரகடனம் செய்த அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்- வடகொரியா
- 'கல்லைப் போல் இறுகும் உடல்'-அரிய வகை நோயால் அவதிப்படும் பெண்
- உலக அளவில் கடற்படையை விரிவாக்க முயற்சி செய்யும் சீனா
- இலங்கையிலிருந்து பணிப்பெண் வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை வீழ்ச்சி?
- 16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா
- கிரிக்கெட்: தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா - உள்ளூரில் புலி, வெளியூரில் எலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்