You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் தண்டனை, அபராதமாக மாற்றம்
வரி மோசடிக்காக சிறைத் தண்டனை பெற்ற பார்சிலோனா மற்றும் ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தண்டனை, அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லியோனல் மெஸ்ஸிக்கு பார்சிலோனா நீதிமன்றம் வழங்கிய இருபத்தி ஒரு மாத தண்டனை, இரண்டு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் டாலர்கள் அபராதமாக மாற்றப்பட்டுள்ளது.
இடைநிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையாக மெஸ்ஸிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
மிகப்பெரும் செல்வந்தரான மெஸ்ஸி, பார்சிலோனா கிளப்புடன் ஒப்பந்த நீட்டிப்பு ஒன்றில் அண்மையில்தான் கையெழுத்திட்டார்.
விளையாட்டுத் துறையின் வரலாற்றிலேயே மிக அதிகமாக ஊதியம் பெரும் வீரர் மெஸ்ஸி என்று அந்த கிளப்பின் தலைவர் கூறியுள்ளார்.
வரி ஏய்ப்புக்காக, மெஸ்ஸியின் தந்தைக்கும் 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது 200 மில்லியன் டாலர் அபராதமாக மாற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
- கத்தார் பிடிவாதம்; எச்சரிக்கும் செளதி கூட்டணி
- சினிமா விமர்சனம்: ஸ்பைடர் மென் - ஹோம்கமிங்
- அமெரிக்க கொடியின் மீது சிறுநீர் கழித்த பெண்ணுக்கு மிரட்டல்
- ஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை
- இது இஸ்ரேல் மேஜிக்: மணலில் ஒரு மந்திரம்!
- திரவியம் தேட திரைகடலோடும் தமிழர்கள் - எங்கு, ஏன் செல்கிறார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்