கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம் உலகளவில் எந்த நிலையில் உள்ளது?

கொரோனா தடுப்பு மருந்து ஊசி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து விநியோகம் என்று வரும் போது, பெரும்பாலான மக்கள் "எனக்கு எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்" என ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். சில நாடுகள் மட்டுமே பிரத்யேகமாக சில இலக்குகளை வைத்திருக்கிறார்கள். மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக ஒரு தெளிவு இல்லை. சரி இப்போது நமக்கு என்ன தெரியும்?

உலக தடுப்பூசி விநியோகம்

உலக தடுப்பூசி விநியோகம்

ஸ்க்ரோல் செய்ய
உலகம்
61
12,120,524,547
சீனா
87
3,403,643,000
இந்தியா
66
1,978,918,170
அமெரிக்கா
67
596,233,489
பிரேசில்
79
456,903,089
இந்தோனீசியா
61
417,522,347
ஜப்பான்
81
285,756,540
வங்கதேசம்
72
278,785,812
பாகிஸ்தான்
57
273,365,003
வியட்நாம்
83
233,534,502
மெக்சிகோ
61
209,179,257
ஜெர்மனி
76
182,926,984
ரஷ்யா
51
168,992,435
பிலிப்பீன்ஸ்
64
153,852,751
இரான்
68
149,957,751
பிரிட்டன்
73
149,397,250
துருக்கி
62
147,839,557
பிரான்ஸ்
78
146,197,822
தாய்லாந்து
76
139,099,244
இத்தாலி
79
138,319,018
தென் கொரியா
87
126,015,059
அர்ஜெண்டினா
82
106,075,760
ஸ்பெயின்
87
95,153,556
எகிப்து
36
91,447,330
கனடா
83
86,256,122
கொலம்பியா
71
85,767,160
பெரு
83
77,892,776
மலேசியா
83
71,272,417
சௌதி அரேபியா
71
66,700,629
மியான்மர்
49
62,259,560
சிலி
92
59,605,701
தைவான்
82
58,215,158
ஆஸ்திரேலியா
84
57,927,802
உஸ்பெகிஸ்தான்
46
55,782,994
மொராக்கோ
63
54,846,507
போலந்து
60
54,605,119
நைஜீரியா
10
50,619,238
எத்தியோப்பியா
32
49,687,694
நேபாளம்
69
46,888,075
கம்போடியா
85
40,956,960
இலங்கை
68
39,586,599
கியூபா
88
38,725,766
வெனிசுவேலா
50
37,860,994
தென் ஆஃப்ரிக்கா
32
36,861,626
ஈக்குவடார்
78
35,827,364
நெதர்லாந்து
70
33,326,378
உக்ரைன்
35
31,668,577
மொசாம்பிக்
44
31,616,078
பெல்ஜியம்
79
25,672,563
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
98
24,922,054
போர்ச்சுகல்
87
24,616,852
ருவாண்டா
65
22,715,578
ஸ்வீடன்
75
22,674,504
உகாண்டா
24
21,756,456
கிரேக்கம்
74
21,111,318
கஜகஸ்தான்
49
20,918,681
அங்கோலா
21
20,397,115
கானா
23
18,643,437
இராக்
18
18,636,865
கென்யா
17
18,535,975
ஆஸ்திரியா
73
18,418,001
இஸ்ரேல்
66
18,190,799
குவாத்தமாலா
35
17,957,760
ஹாங் காங்
86
17,731,631
செக் குடியரசு
64
17,676,269
ருமேனியா
42
16,827,486
ஹங்கேரி
64
16,530,488
டொமினிக்கன் குடியரசு
55
15,784,815
சுவிட்சர்லாந்து
69
15,759,752
அல்ஜீரியா
15
15,205,854
ஹாோண்டுரஸ்
53
14,444,316
சிங்கப்பூர்
92
14,225,122
பொலிவியா
51
13,892,966
தஜிகிஸ்தான்
52
13,782,905
அஜர்பைஜான்
47
13,772,531
டென்மார்க்
82
13,227,724
பெலாரஸ்
67
13,206,203
துனீசியா
53
13,192,714
ஐவரி கோஸ்ட்
20
12,753,769
ஃபின்லாந்து
78
12,168,388
ஜிம்பாப்வே
31
12,006,503
நிகரகுவா
82
11,441,278
நார்வே
74
11,413,904
நியூசிலாந்து
80
11,165,408
கோஸ்டா ரிக்கா
81
11,017,624
அயர்லாந்து
81
10,984,032
எல் சால்வடார்
66
10,958,940
லோவோ ஜனநாயக மக்கள் குடியரசு
69
10,894,482
ஜோர்டான்
44
10,007,983
பராகுவே
48
8,952,310
தான்சானியா
7
8,837,371
உருகுவே
83
8,682,129
செர்பியா
48
8,534,688
பனாமா
71
8,366,229
சூடான்
10
8,179,010
குவைத்
77
8,120,613
ஜாம்பியா
24
7,199,179
துர்க்மேனிஸ்தான்
48
7,140,000
ஸ்லோவாக்கியா
51
7,076,057
ஓமன்
58
7,068,002
கத்தார்
90
6,981,756
ஆஃப்கானிஸ்தான்
13
6,445,359
கினி
20
6,329,141
லெபனான்
35
5,673,326
மங்கோலியா
65
5,492,919
குரேஷியா
55
5,258,768
லித்துவேனியா
70
4,489,177
பல்கேரியா
30
4,413,874
சிரியா
10
4,232,490
பாலத்தீனம்
34
3,734,270
பெனின்
22
3,681,560
லிபியா
17
3,579,762
நைஜர்
10
3,530,154
காங்கோ ஜனநாயக குடியரசு
2
3,514,480
சியாரா லியோன்
23
3,493,386
பஹ்ரைன்
70
3,455,214
டோகோ
18
3,290,821
கிர்கிஸ்தான்
20
3,154,348
சோமாலியா
10
3,143,630
ஸ்லோவேனியா
59
2,996,484
புர்கினோ ஃபாசோ
7
2,947,625
அல்பேனியா
43
2,906,126
ஜார்ஜியா
32
2,902,085
லாட்வியா
70
2,893,861
மாரிடானியா
28
2,872,677
போட்ஸ்வானா
63
2,730,607
லைபீரியா
41
2,716,330
மொரீசியஸ்
74
2,559,789
செனகல்
6
2,523,856
மாலி
6
2,406,986
மடகாஸ்கர்
4
2,369,775
சாட்
12
2,356,138
மலாவி
8
2,166,402
மால்டோவா
26
2,165,600
ஆர்மீனியா
33
2,150,112
எஸ்தோனியா
64
1,993,944
போஸ்னியா-ஹெர்சகோவினா
26
1,924,950
பூடான்
86
1,910,077
மாசிடோனியா
40
1,850,145
கேமரூன்
4
1,838,907
கொசோவோ
46
1,830,809
சைப்ரஸ்
72
1,788,761
திமோர்-லெஸ்டே
52
1,638,158
ஃபிஜி
70
1,609,748
ட்ரினிடாட் மற்றும் டொபாகோ
51
1,574,574
ஜமைக்கா
24
1,459,394
மக்காவ்
89
1,441,062
மால்டா
91
1,317,628
லக்சம்பர்க்
73
1,304,777
தெற்கு சூடான்
10
1,226,772
மத்திய ஆஃப்ரிக்க குடியரசு
22
1,217,399
புரூனே
97
1,173,118
கயானா
58
1,011,150
மாலத் தீவுகள்
71
945,036
லெசோத்தோ
34
933,825
யேமன்
1
864,544
காங்கோ
12
831,318
நமீபியா
16
825,518
காம்பியா
14
812,811
ஐஸ்லாந்து
79
805,469
கேப் வர்டி
55
773,810
மொண்டெனேகுரோ
45
675,285
கொமரோஸ் தீவுகள்
34
642,320
பப்புவா நியூ கினி
3
615,156
கினி பிஸாவ்
17
572,954
கேபான்
11
567,575
சுவாசிலாந்து
29
535,393
சூரிநாம்
40
505,699
சமாவோ
99
494,684
பெலிஸ்
53
489,508
ஈக்வடோரியல் கினி
14
484,554
சாலமன் தீவுகள்
25
463,637
ஹைட்டி
1
342,724
பஹாமாஸ்
40
340,866
பார்படோஸ்
53
316,212
வனவாடூ
40
309,433
டோங்கா
91
242,634
ஜெர்ஸி
80
236,026
ஜிபோட்டி
16
222,387
சீசெல்ஸ்
82
221,597
சாவ் டாம் மற்றும் ப்ரின்சிபீ
44
218,850
ஐல் ஆஃப் மேன்
79
189,994
குவெரன்சே
81
157,161
அண்டோரா
69
153,383
கிரிபாட்டி
50
147,497
கேமேன் தீவுகள்
90
145,906
பெர்முடா
77
131,612
அண்டிகுவா மற்றும் பார்புடா
63
126,122
செயிண்ட் லூசியா
29
121,513
ஜிப்ரால்ட்டர்
123
119,855
ஃபாரோ தீவுகள்
83
103,894
கிரெனேடா
34
89,147
கிரீன்லாந்து
68
79,745
செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனேடியர்ஸ்
28
71,501
லீச்சன்ஸ்டயின்
69
70,780
துருக்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்
76
69,803
சான் மரினோ
69
69,338
டொமினிகா
42
66,992
மொனாக்கோ
65
65,140
செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
49
60,467
பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள்
59
41,198
குக் தீவுகள்
84
39,780
அன்கிலா
67
23,926
நவூரு
79
22,976
புரூண்டி
0.12
17,139
துவாலு
52
12,528
செயிண்ட் ஹெலீனா
58
7,892
மொண்டெசெரட்
38
4,422
ஃபாக்லாந்து தீவுகள்
50
4,407
நியூ
88
4,161
டோகிலவ்
71
1,936
பிட்கரின்
100
94
எரித்ரியா
0
0
தென் ஜார்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகள்
0
0
பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி
0
0
வட கொரியா
0
0
வாட்டிகன்
0
0

முழு தொடர்பாடலை பார்க்க உங்கள் ப்ரொவ்சரை புதுப்பிக்கவும்

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்பது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான விஷயம்.

இதில் சிக்கலான அறிவியல் செயல்பாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், முரண்படும் அரசாங்கங்களின் வாக்குறுதிகள், அதிக அளவில் அரசு அதிகாரிகளின் தலையீடு, வரையறைகள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதாவது, உலக மக்களுக்கு, எப்போது, எப்படி கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்பதைத் திட்டமிடுவது அத்தனைத் தெளிவாக இல்லை.

இது தொடர்பாக, எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டில் (இ.ஐ.யூ), உலகளாவிய முன்கணிப்பு மதிப்பீட்டு இயக்குநராக இருக்கும் அகதே டிமரய்ஸ் சில விரிவான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார்.

உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தித் திறன், தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் சுகாதார உள்கட்டமைப்பு, நாடுகளின் மக்கள் தொகை, நாடுகளால் கொரோனா தடுப்பூசிக்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என பல விவரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டது இ.ஐ.யூ.

இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களும், ஏழை மற்றும் பணக்காரர்கள் என்கிற வரிசையில் பொருந்திப் போவதாகத் தெரிகிறது. தற்போது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு தாராளமாக கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் அந்நாடுகள் கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுக்கு என அதிகம் முதலீடு செய்தது தான். எனவே கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெரும் நாடுகள் பட்டியலில் இந்நாடுகள் முதல் வரிசையில் நிற்கின்றன.

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு கொஞ்சம் பின் தங்கி இருக்கிறார்கள்.

பெரும்பாலான குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் இதுவரை கொரோனா தடுப்பு மருந்தை வழங்கத் தொடங்கவில்லை. இதில் சில ஆச்சர்யமான விஷயங்களும் இருக்கின்றன. உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுவது எப்படி நடந்து வருகிறது என்பதைப் பாருங்கள்.

கடந்த ஆண்டின் இறுதியில், கனடா நாடு தனக்குத் தேவையான கொரோனா தடுப்பு மருந்தை விட ஐந்து மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கியதற்கு, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால் அந்நாட்டுக்கு தடுப்பு மருந்து விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

கனடா, ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து ஆலைகளில் முதலீடு செய்தது. அது தவறான முதலீடாகிவிட்டது.

ஐரோப்பிய மருந்து ஆலைகள் சப்ளை செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அதோடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்யத் தடை விதிப்போம் என அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் போதுமான கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் வரை, கனடா நாட்டுக்குப் பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது சாத்தியமில்லை என நான் நினைக்கிறேன்," என்கிறார் அகதே டிமரய்ஸ்.

ஆனால் சில நாடுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, உலக அளவில் தன் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் உலக நாடுகள் பட்டியலில் செர்பியா எட்டாவது இடத்தில் இருக்கிறது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விடவும் அதிகம். செர்பியாவின் இந்த வெற்றிக்கு, அந்நாடு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் விதமும் ஒரு முக்கியக் காரணம். அதே நேரத்தில், செர்பியா வேசின் டிப்ளொமெசி என்றழைக்கப்படும், தடுப்பு மருந்தை வைத்து ராஜ தந்திர நடவடிக்கைகளாலும் பயனடைந்து வருகிறது. மத்திய ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யாவும் சீனாவும் தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள். அது வேசின் டிப்ளொமெசியாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உலகில் செர்பியா உட்பட, வெகு சில இடங்களில் தான் ரஷ்யாவின் ஸ்புட்நிக் V மற்றும் சீனாவின் சினோஃபார்ம் மருந்துகள் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

காகிதங்களில், செர்பிய மக்களுக்கு எந்த கொரோனா தடுப்பு மருந்து வேண்டும், பைசர், ஸ்புட்நிக், சினோஃபார்ம்... எனக் கேட்கப்படுகிறது. ஆனால் எதார்த்தத்தில் சினோஃபார்ம் தடுப்பு மருந்தே கொடுக்கப்படுகிறது. செர்பியாவில் சீனா செலுத்தும் ஆதிக்கம் நீண்ட காலத்துக்கு இருக்கலாம். தற்போது சீனவின் சினோஃபார்ம் தடுப்பு மருந்தை பயன்படுத்தும் நாடுகள், எதிர்காலத்திலும் தடுப்பு மருந்துகள் தேவைப்பட்டால், சீனாவை எதிர்பார்க்கலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட சினோஃபார்மைத் தான் பெரிதும் நம்பி இருக்கிறது. இதுவரை அந்நாட்டில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பு மருந்துகளில் 80% சினோஃபார்ம் தான் செலுத்தப்பட்டிருக்கிறது. இது போக யூ.ஏ.இ-யில் சினோஃபார்ம் மருந்து உற்பத்தி ஆலையை கூட நிறுவிக் கொண்டிருக்கிறது.

"சீனா தன் தடுப்பு மருந்து உற்பத்தி ஆலைகளோடும், தேர்ந்த பணியாளர்களோடும் வருகிறது. எனவே இது, சீனாவுக்கு நீண்ட காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பைக் கொடுக்கிறது. இந்த வசதிகளைப் பெறும் நாடுகள், எதிர்காலத்தில் சீனாவுக்கு எதிலும் மறுப்பு தெரிவிக்க முடியாத அளவுக்கு சிக்கலாகிவிடும்" என்கிறார் அகதே டிமரய்ஸ்.

உலகத்துக்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும் வல்லமை கொண்ட நாடாக இருப்பதால், அந்நாட்டு மக்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என்று அர்த்தமல்ல.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இந்தியா மற்றும் சீனாவில், 2022-ம் ஆண்டு இறுதி வரை போதுமான மக்களுக்கு தடுப்பு மருந்தைச் செலுத்தி இருக்க முடியாது என, இ.ஐ.யூ-வின் ஆராய்ச்சி கணித்திருக்கிறது. அதற்கு இரு நாடுகளிலும் இருக்கும் அதிக மக்கள் தொகை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையைக் காரணமாகக் கூறுகிறது இ.ஐ.யூ.

இந்தியாவில், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்கிற ஒரே ஒரு நிறுவனம் தான் பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தான் உலகிலேயே மிகப் பெரிய கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியாளர்.

கடந்த ஆண்டின் மத்தியில், இந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலாவுக்கு `என்ன ஆயிற்று?` என அவரது குடும்பத்தினரே நினைக்கத் தொடங்கினார்கள். கொரோனா தடுப்பு மருந்து வேலை செய்யுமா என்று கூடத் தெரியாமல், பல நூறு மில்லியன் டாலர் சொந்தப் பணத்தை, கொரோனா தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்தார்.

கடந்த ஜனவரி மாதம், ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் ஆஸ்ட்ராசெனீகா இணைந்து தயாரித்த தடுப்பு மருந்து இந்திய அரசிடம் கொடுக்கப்பட்டது. இப்போது நாள் ஒன்றுக்கு 24 லட்சம் டோஸ் தடுப்பூசிகளைத் தயாரிக்கிறார் பூனாவாலா.

சீரம் இன்ஸ்டிட்யூட் தான் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் மிகப் பெரிய சப்ளையர்களில் ஒன்று. அதோடு இந்நிறுவனம், பிரேசில், மொராக்கோ, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது.

"ஒரு தடுப்பூசியைத் தயாரித்துவிட்டதால் அழுத்தம் குறைந்துவிடும் என்று நினைத்தென். ஆனால் இப்போது எல்லோரையும் திருப்திப்படுத்துவது தான், என் முன்னிருக்கும் மிகப் பெரிய சவால்" என்கிறார் பூனாவாலா.

"பல தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் இருப்பார்கள், விநியோகம் அதிகரிக்கும் என்று நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2021-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை கூட, தடுப்பூசி விநியோகம் அதிகரிக்காது போலத் தெரிகிறது" என்கிறார் பூனாவாலா.

உற்பத்தியை ஓர் இரவில் அதிகரித்துவிட முடியாது என்கிறார் ஆதார் பூனாவாலா.

"உற்பத்தியை அதிகரிக்க கால அவகாசம் தேவை. சீரம் இன்ஸ்டிட்யூட்டிடம் ஏதோ ரகசியம் இருக்கிறது என்கிறார்கள் மக்கள். ஆம் நாங்கள் செய்யும் வேலையை சிறப்பாகச் செய்கிறோம். ஆனால் அவை எல்லாம் ஏதோ ஒரு நொடியில் மந்திரக் கோலால் வந்துவிடவில்லை" என்கிறார்.

இப்போது சீரம் இன்ஸ்டிட்யூட் முன்னிலை வகிப்பதற்குக் காரணம், தன் உற்பத்தி ஆலையை கடந்த மார்ச் முதல் மேம்படுத்தி வந்தார் பூனாவாலா. அதோடு, தடுப்பூசிக்குத் தேவையான ரசாயனங்கள், கண்ணாடிக் குப்பிகள் போன்றவற்றை கடந்த ஆகஸ்ட் முதல் வாங்கி வைத்தார்.

தடுப்பூசி உற்பத்தியின் பல கட்டங்களில், எப்போது வேண்டுமானாலும், தவறு நடக்கலாம்.

"இதில் எந்த அளவுக்கு கலை இருக்கிறதோ அதே அளவுக்கு அறிவியலும் இருக்கிறது" என்கிறார் அகதே டிமரய்ஸ்

இப்போது உற்பத்தியைத் தொடங்கும் உற்பத்தியாளர்களால், பல மாதங்களுக்குப் பிறகு தான் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். அதே நிலை தான் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளை எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும் பூஸ்டர்களுக்கும் பொருந்தும்.

இந்தியாவுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்தைக் கொடுக்க உறுதியளித்திருப்பதாகவும், அதன் பிறகு ஆப்பிரிக்க நாடுகளுக்கு கோவேக்ஸ் திட்டம் மூலம் தடுப்பூசிகளைக் கொடுக்க உறுதியளித்திருப்பதாகவும் கூறுகிறார் பூனாவாலா.

கோவேக்ஸ் என்கிற திட்டம், உலக சுகாதார அமைப்பு, கவி என்கிற தடுப்பூசிக் கூட்டமைப்பு, சென்டர் ஃபார் எபிடமிக் ப்ரிபேரட்னெஸ் போன்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் மலிவு விலையில் கொரோனா தடுப்பூசியைக் கிடைக்கச் செய்வது தான் இதன் நோக்கம்.

எந்த நாடுகளால் கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியவில்லையோ, அந்நாடுகளுக்கு சிறப்பு நிதி மூலம் இலவசமாக வழங்கப்படும். மற்ற நாடுகள் பணம் செலுத்தி தடுப்பூசிகளை வாங்குவார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தனியாக நாடுகள் பேரம் பேசி மருந்தை வாங்குவதை விட, ஒரு கூட்டாக சேர்ந்து மருந்து நிறுவனங்களோடு பேரம் பேசுவதால், நல்ல விலைக்கு தடுப்பூசியை வாங்கலாம்.

கோவேக்ஸ் திட்டமும் இந்த பிப்ரவரி இறுதிக்குள்ளிருந்து தடுப்பூசி விநியோகிகத்தைத் தொடங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில், கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இணைந்து இருக்கும் நாடுகள், தனியாக மருந்து நிறுவனங்களோடு பேரம் பேசுவதால், கோவேக்ஸ் திட்டத்தின் நோக்கம் கேள்விக்குள்ளாகிறது.

கிட்டத்தட்ட எல்லா ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும், தனிப்பட்ட முறையில் கொரோனா தடுப்பூசியைப் பெற, தன்னோடு பேசியதாகக் கூறுகிறார் சீரம் இன்ஸ்டிட்யூட்டின் சி.இ.ஓ பூனாவாலா. சீரம் இன்ஸ்டிட்யூட்டிடம் இருந்து ஒரு டோஸ் தடுப்பூசியை 7 அமெரிக்க டாலர் என 18 மில்லியன் டோஸ் மருந்தைப் பெற்று இருப்பதாக உகாண்டா கடந்த வாரம் அறிவித்தது. கோவேக்ஸ் திட்டமோ ஒரு டோஸ் மருந்துக்கு 4 அமெரிக்க டாலரைச் செலுத்துகிறது.

உகாண்டா நாட்டோடு பேச்சு வார்த்தை நடத்துவது உண்மை தான், ஆனால் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என மறுத்திருக்கிறது சீரம் இன்ஸ்டிட்யூட்.

பெண்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்ட்ராசெனீகா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்த உடன், 200 மில்லியன் டோஸ் மருந்தை சப்ளை செய்வார் பூனாவாலா. மேலும் 900 மில்லியன் டோஸ் மருந்தைக் கொடுக்க உறுதியளித்திருக்கிறார். ஆனால் எப்போது கொடுக்கப்படும் எனக் கூறவில்லை.

கோவேக்ஸ் திட்டத்துக்கு மருந்துகளைக் கொடுக்க உறுதியளித்தாலும், அதில் சிக்கல்கள் எழுவதையும் ஆமோதித்திருக்கிறார் பூனாவாலா. கோவேக்ஸ் திட்டம் பல்வேறு தடுப்பூசி தயாரிப்பாளர்களோடு பேசி வருகிறது. ஒவ்வொரு தடுப்பு மருந்து உற்பத்தியாளரும் ஒரு விலையையும், விநியோகிப்பதற்கான கால அட்டவனையையும் கூறுகிறார்கள்.

எல்லாம் திட்டமிட்டப் படி நடந்தால் கூட, கோவேக்ஸ் திட்டம் ஒரு நாட்டின் 20 - 27 சதவீத மக்களைத் தான் சென்றடைய இலக்கு வைத்திருக்கிறது. "இது ஒரு சிறிய மாற்றத்தைத் தான் கொண்டு வரும், பெரிய தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வராது" என்கிறார் அகதே.

சில நாடுகள் 2023-ம் ஆண்டில் கூட (அல்லது எந்த காலத்திலும்) முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கலாம். என அகதே டிமரய்ஸ், இ.ஐ.யூ-வின் கணிப்பில் கூறியுள்ளார். "எல்லா நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி ஒரு முன்னுரிமைத் திட்டமாக இருக்காது. குறிப்பாக அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட, அதிக அளவில் கொரோனா பரவாத நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது முக்கிய திட்டமாக இருக்காது".

இப்படிப்பட்ட சூழலில் என்ன பிரச்சனை என்றால், கொரோனா வைரஸ் எங்காவது ஓரிடத்தில் வளர முடியும் என்றால் கூட, தடுப்பு மருந்தை எதிர்கொள்ளும் தன்மையோடு தன் மரபணுக்களை மாற்றிக் கொண்டு, மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் என்பது தான்.

தடுப்பு மருந்துகள் உற்பத்தி வரலாறு காணாத வேகத்தில் நடந்து வருகிறது. ஆனால் 770 கோடி பேருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற இலக்கு மிகப் பெரியது, இதுவரை இப்படிப்பட்ட ஒரு பெருமுயற்சி எடுக்கப்படவில்லை.

தங்களால் என்ன செய்ய முடியும் என, அரசாங்கங்கள் தங்கள் நாட்டு மக்களோடு உண்மையாக இருக்க வேண்டும் என நம்புகிறார் அகதே டிமரய்ஸ். "அடுத்த பல ஆண்டுகளுக்கு நம் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் தடுப்பூசியை வழங்க முடியாது என ஒரு அரசு கூறுவது மிகவும் கடினம். எந்த ஒரு அரசும் முன் வந்து அப்படிக் கூற விரும்பமாட்டார்கள்" என்கிறார் அகதே டிமரய்ஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: