கொரோனா வைரஸ் அறிகுறி: காய்ச்சல், சளி கோவிட் -19 தொற்றா என எப்படி கண்டுபிடிப்பது?

கொரோனா அறிகுறி

பட மூலாதாரம், Getty Images

மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல்,தொண்டை வலி ஆகியவை எல்லாம் ஏற்படுவது இயல்பானவையே. அதுவும் மழை மற்றும் குளிர் காலத்தில் இவை அடிக்கடி வரும் ஒன்று.

அது கோவிட் -19 நோய்க்கான அறிகுறியா என்று எப்படி கண்டறிவது?

உடல் வெப்பம் 37.8 C-க்கு மேல் இருந்தால் நீங்கள் கட்டாயம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பரிசோதனை முடிவு வரும்வரை உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் என்பது ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பாகவும் இருக்கலாம். வேறு அறிகுறிகள் இல்லை எனில் சாதாரண சளியாக இருக்கலாம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

நீங்கள் இந்த அறிகுறிகள் வந்தால் வாயை மூடி தும்ம வேண்டும்; அடிக்கடி கைகளை கழுவவும். மூக்கடைப்பு போன்றவையும் சளியால் ஏற்படலாம்.

ஆனால் மணம், சுவை உணர்தலை நீங்கள் இழந்தால் கொரோனா பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

இருமல் ஏற்படுவது எதனால் என்பதை சொல்து கடினம். கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் இருமல் வரும் அல்லது அவர்கள் ஒரே நாளில் மூன்று, நான்கு முறை தொடர் இருமலால் அவதிப்படுவார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

உங்களுக்கு அதிக இருமல் இருந்து மூச்சுத்திணறல் இருந்தால் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

கை கழுவுவது, முகக்கவசம் அணிவது ஆகியன கோவிட்-19 தொற்றிலிருந்து மட்டுமல்லாது குளிர் காலத்தில் உண்டாகும் பாதிப்பில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: