டெல்லி விவசாயிகள் போராட்டம்: "நாளை கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் டெல்லி - உத்தரப் பிரதேசம் சாலை முடக்கப்படும்"

பட மூலாதாரம், ANI
டிராக்டர்களைத் தவிர்ப்பது குறித்து நாளை காலை 11 மணிக்கு நிர்வாகத்தோடு நடக்கும் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் சாலையின் இருபுறமும் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்கள் விவசாயிகள்.
இந்திய அரசு புதிதாகக் கொண்டுவந்திருக்கும் 3 விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்குப் பாதகமாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாகவும் இருக்கும் என்று கூறி விவசாயிகள் கடந்த மூன்று வாரங்களாக டெல்லியின் பல எல்லைகளில் போராடி வருகிறார்கள்.
டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்துள்ள காசிபூரில் இன்று பேசிய அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சர்தார் வி.எம்.சிங், "டிராக்டர்களின் நடமாட்டத்தைத் தவிர்ப்பது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நாளை சாலையின் இருபுறத்தையும் முடக்குவோம்" என்று கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதனிடையே, விவசாயிகள் போராட்டம் பற்றிப் பேசிய ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் கட்சித் தலைவர் அனுமன் பேனிவால் "மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கும் மனநிலையிலேயே இருப்பதாகத் தெரிகிறது. எனவே, டிசம்பர் 26-ம் தேதி ராஜஸ்தானில் இருந்து டெல்லியை நோக்கி 2 லட்சம் விவசாயிகள் மற்றும் இளைஞர்களை அழைத்துவருவது என்று எங்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அனுமன் பேனிவால், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக மூன்று நாடாளுமன்றக் குழுக்களில் இருந்து விலகிவிட்டார் என்கிறது பி.டி.ஐ. செய்தி முகமை.
பிற செய்திகள்:
- இந்தியா பாகிஸ்தான் 1971 போர்: இந்தியாவை மிரட்ட வந்த அமெரிக்க போர் கப்பல்கள் - என்ன ஆனது?
- IND vs AUS டெஸ்ட்: இந்திய டெஸ்ட் இன்னிங்ஸ் வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர்
- சமூக இடைவெளியால் உறவுகள் பிரியுமா? தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன?
- மாடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி; 20 கோடி டோஸ்கள் வாங்க ஒப்புதல்
- 'கொரோனா கர்ப்பிணிகளின் குழந்தைகள் உடலில் எதிர்ப்பான்கள்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












