தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

விஜயகாந்த்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, கோப்புப்படம்

கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை மேம்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு செப்டம்பர் 28ஆம் தேதியன்று அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அக்டோபர் ஆறாம் தேதியன்று விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே சேர்க்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.

தற்போது அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலமும் அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்று கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: