You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவைத் தேர்தல் 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
பிகார், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் மொத்தம் 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 1.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
9.5 கோடி பேர் இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். அதில் 4.9 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 4.5 கோடி பேர் பெண் வக்காளர்கள். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 3,500 பேர்.
உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோர் இந்த வாக்குப்பதிவில் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி குருகிராமில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மக்களவைத் தேர்தலின் கடைசி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு மே 19 அன்று நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்