அபிநந்தன் வர்தமான்: மூன்று தலைமுறையாக இந்திய விமானப்படை சேவையில் இருக்கும் குடும்பம்

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று நாடு முழுக்க சமூக ஊடங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
யார் இந்த அபிநந்தன்? விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநந்தன்?

திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர்தான், அபிநந்தன் குடும்பத்தின் பூர்வீக கிராமம். அபிநந்தனின் பெற்றோர் தற்போது சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அபிநந்தனின் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அபிநந்தனுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்திய விமானப்படையில் எப்போது சேர்ந்தார்?

பட மூலாதாரம், sainikschool
விங் கமாண்டர் அபிநந்தன் கோவையிலுள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இந்திய விமானப்படையில் சுமார் 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அபிநந்தன், 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தற்போது, விங் கமாண்டர் பதவியை வகிக்கிறார். இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு இணையானது விங் கமாண்டர் பதவி.
மனைவியும் விமான படை வீரர்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அபிநந்தனின் மனைவி தான்வி மர்வாவும் இந்திய விமானப்படையில் பணியாற்றிவர்தான். 2005 ஆம் ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்தார். ஸ்குவாட்ரன் லீடராக இருந்து விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
மணி ரத்னம் படத்திற்கு உதவிய அபிநந்தனனின் தந்தை

இந்திய விமானப்படையில் மிக மூத்த அதிகாரியாக இருந்தவர் சிம்மகுட்டி வர்தமான். 1974ல் இந்தியா விமானப்படையில் பணியில் சேர்ந்த அவர், 2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய பணிக் காலத்தில் மொத்தம் ஏழு பதவி உயர்வுகளைப் பெற்று ஏர் மார்ஷலாக ஓய்வு பெற்றார். 2017ல் வெளியான இயக்குநர் மணி ரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு ஆலோசராக செயல்பட்டுள்ளார். அபிநந்தனின் தாய் ஷோபனா வர்தமான் சென்னையில் மருத்துவம் பயின்றவர். விங் கமாண்டர் அபிநந்தனின் தாத்தா இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்ததகாவும் கூறப்படுகிறது.
- பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கிய இந்திய விமானிகள் இவர்கள்தானா?
- அபிநந்தனை பாகிஸ்தானில் இருந்து இந்தியா கொண்டுவருவது எப்படி?
- அபிநந்தனுக்கு முன்பே கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி
- போர்க் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும்? ஜெனிவா ஒப்பந்தம் கூறுவதென்ன?
- பாகிஸ்தானில் வைரலாகப் பரவுகிறது வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள்
- பாகிஸ்தான் தாக்குதல்: "பதிலடி தர முடியும் என்பதை காட்டவே இந்த நடவடிக்கை"
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












