சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி--உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், தற்போதைய அஇஅதிமுக பொதுச்செயலருமான, சசிகலா நடராஜன் உட்பட மூவர் குற்றவாளிகள் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில் விசாரணை நீதிமன்றமான பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்திருக்கிறது.
குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












