டொனால்ட் டிரம்ப் - ‘பிரதமர் நரேந்திர மோதி ஒரு ஜென்டில்மேன்’

பட மூலாதாரம், Sergio Flores/Getty Images
வரும் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பயணம் குறித்து தான் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''இந்திய பிரதமர் நரேந்திர மோதி எனது நண்பர். மேலும் அவர் ஒரு சிறந்த ஜென்டில்மேனும் கூட. இந்திய பயணம் குறித்து நான் எதிர்பார்ப்புடன் உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
''எங்கள் நாட்டில் பல மில்லியன் மக்கள் உள்ளனர் என்று மோதி கூறுவார். விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் மொட்டேரா கிரிக்கெட் மைதானம் வரையிலான வழியில் ஏறக்குறைய 50 முதல் 70 லட்சம் வரை மக்கள் இருப்பார்கள் என மோதி எண்ணுகிறார்'' என்பர் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.
தனது மனைவி மெலினாவுடன் பிப்ரவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் டிரம்ப இந்தியா வரவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகிய இருவரும் உரையாற்றவுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் கலந்துகொண்ட 'ஹௌடி மோடி' நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அப்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













