உணவு சமைக்க கஞ்சா, எரிமலை அடிவாரத்தில் வீடு - கைதான தொலைக்காட்சி பிரபலம்

cannabis

பட மூலாதாரம், Getty Images

இத்தாலியின் சிசிலி தீவில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சமையல் கலைஞர் ஒருவர், கஞ்சாவை வைத்து உணவுகளுக்கு புதிய சுவை ஊட்டுவது பற்றி தாம் ஆய்வுகள் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கார்மெலோ க்யாராமோன்தே எனும் 51 வயதாகும் அந்த பிரபல சமையல் கலைஞரின் வீட்டில் இருந்து இரண்டு பெரிய கஞ்சா செடிகள் மற்றும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட செடிகளில் இருந்து கிடைத்த ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா கலக்கப்பட்ட காஃபி, வைன் மற்றும் ஆலீவ் உணவு வகைகள் ஆகியவையும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.

அவரது வீடு மவுண்ட் எட்னா எரிமலையின் அடிவாரத்தில் உள்ள த்ரெஸ்காதாஞ்சி எனும் கிராமத்தில் அமைத்துள்ளது.

cannabis

பட மூலாதாரம், CARABINIERI CATANIA

வாசனை உணர்வுகள் மற்றும் மத்திய தரைக்கடல் பிரதேசத்தில் வாழும் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அவர் உணவு சமைப்பார் என்று அவரது இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் 'சாகாவரம் பெற்ற மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய' உணவுகள் பற்றிய ஒரு பிரபல சமையல் கலை நிகழ்ச்சியை தொலைக்காட்சி ஒன்றில் வழங்கி வந்துள்ளார் என்று 'லா சிசிலியா' எனும் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :