கத்தாரை தனிமைப்படுத்துவது இஸ்லாமிய மதிப்பீடுகளுக்கு எதிரானது: எர்துவான்
பல அரபு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிரானது, மனிதாபிமானமற்றது என்று துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பட மூலாதாரம், MOD
செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள், கத்தார் மீது அமல்படுத்தியுள்ள தடை, மரண தண்டனைக்கு ஒப்பானது என்று எர்துவான் கூறினார்.
கத்தாருக்கு உறுதியான ஆதரவளிக்கும் துருக்கி, பிற நாடுகள் விதித்திருக்கும் தடையின் விளைவுகளை சமாளிப்பதற்காக , விமானம் மூலம் உதவிப்பொருட்களை அனுப்பிவருகிறது.

பட மூலாதாரம், AFP
துருக்கியின் உதவி நடவடிக்கைகளில் இணைந்துள்ள மொராக்கோ அரசும் கத்தாருக்கு விமானம் மூலம் உணவுப்பொருட்களை அனுப்புகிறது.
கத்தாருக்கு அனுப்பப்படும் இந்த உதவி மனிதாபிமான அடிப்படையிலானது என்றும், தீவிரவாதம் தொடர்பாக தோஹா அண்மையில் சந்தித்துவரும் அரசியல் விவகாரத்துடன் தொடர்பில்லாதது என்றும் மொராக்கோ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












