கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்கள் - சமூக ஊடகத்தை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள்

சினிமா

பட மூலாதாரம், S. P. Balasubrahmanyam

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பிரபலங்கள் பலரும் கொரோனா தொடர்பாக உருவாக்கியுள்ள விழிப்புணர்வு பாடல்களுள் சிலவற்றை பார்க்கலாம்.

கொரோனா வைரஸ்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கொரோனா குறித்த பாடலொன்றை பாடியிருக்கிறார். ''அணுவை விடவும் சிறியது.. அணுகுண்டை விடவும் கொடியது'' எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு அவரே மெட்டமைத்து பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருக்கிறார். தமிழில் வைரமுத்துவைப் போன்று தெலுங்கில் வெண்ணிலகண்டி மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் காய்கனி ஆகியோர் கொரோனா குறித்து எழுதிய பாடல்களையும் அந்தந்த மொழிகளிலேயே பாடி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

''இது என்ன உலகமடா.. கண்ணு கலங்குதடா'' எனத் தொடங்கும் உருக்கமான பாடல் ஒன்றை பாடகர் வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை பாடலாசிரியர் சிற்றரசு எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை வேல்முருகன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

''உன்னை காக்கும் நேரமிது.. உன் உயிரை காக்கும் நேரமிது'' எனத் தொடங்கும் பாடலை இயக்குநர் சீனு ராமசாமி எழுதியிருக்கிறார். அந்தப் பாடலை செந்தில்தாஸ் பாடியிருக்கிறார். என்.ஆர். ரகுநாதன் அந்தப் பாடலுக்கு இசையமைத்துக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

''என்னங்க நடக்குது நாட்டுல'' என்கிற பாடலை கானா மணி எழுதியிருக்கிறார். அந்தப் பாடலை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பாடி இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை சாண்டி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

''கவலையும் வேண்டாம்.. கலங்கவும் வேண்டாம்'' எனத் தொடங்கும் கொரோனா விழிப்புணர்வு பாடலை பின்னணி பாடகி ரம்யா துரைச்சாமி உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி எழுதி, இசையமைத்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். 'கொரோனா வைரஸே உன் அழிவை எதிர்பார்த்து நம்ம வேர்ல்டும் வெய்டிங்கே' என அந்தப் பாடல் ஆரம்பிக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக பின்பற்றாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு அறிவுரை கூறும்படி நகைச்சுவை நடிகர் மனோபாலாவுடன் இணைந்து ஒரு குட்டிக் கதையும் இந்தப் பாடலின் தொடக்கத்தில் வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: