சுப்மன் கில் அவுட்டா? இல்லையா? இந்தியா vs ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சர்ச்சை

இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. மிகப்பெரிய இலக்கைத் துரத்தும் இந்திய அணியும் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரர் சுப்மான் கில் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் அது தொடர்பான வாத, விவாதங்களை இப்போதே தொடங்கி விட்டனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களைக் குவிக்க, அடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர், கவாஜா, முதல் இன்னிங்சில் சதம் கண்டு அசத்திய டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 444 ரன்

அதன் தொடர்ச்சியாக, 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி கவனமாக ஆடியது. விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்துவிடக் கூடாது என்பதில் அந்த அணி கவனம் செலுத்தியதால் ரன்கள் வேகமாக வரவில்லை.

126 பந்துகளை சந்தித்த லபுசேனே 41 ரன்களை எடுத்தார். ஐ.பி.எல்.லில் மும்பை அணிக்காக கலக்கல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிரீன், டெஸ்ட் போட்டிக்கே உரித்தான பொறுமையைக் கையாண்டு 95 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார்.

இறுதிக்கட்டத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரேவும், மிட்செல் ஸ்டார்க் ஜோடி அதிரடியாக விளையாடியது. குறிப்பாக, ஸ்டார்கின் ஆட்டம் ஒருநாள் போட்டிகளைப் போலவே அதிரடியாக இருந்தது. அவர் 57 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் வந்த கம்மின்ஸ் 5ரன்களில் ஆட்டமிழந்தார். 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது, அலெக்ஸ் காரே 105 பந்துகளில் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்தாரா? நழுவ விட்டாரா?

இதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்ல 444 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மாவும், ஐ.பி.எல்.லில் அசத்திய, இந்தியாவின் அடுத்த ரன் மெஷின் என்று வர்ணிக்ப்படும் சுப்மான் கில்லும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிட்ட இருவரும் இம்முறை அதிரடி ஆட்டத்தை கைக்கொண்டார்கள். ஏதுவான பந்துகளை தேர்வு செய்து பவுண்டரிக்கு விரட்டினார்கள்.

அந்த வகையில் சுப்மன் கில் 2 பவுண்டரிகளை விளாசி, 19 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்திருந்த வேளையில்தான் அந்த நிகழ்வு நடந்தேறியது. ஸ்காட் போலண்ட் வீசிய பந்து சுப்மன் கில் பேட்டில் பட்டு, ஸ்லிப்பில் நின்றிருந்த கேமரூன் கிரீன் கையில் கேட்சாக மலர்ந்தது. 6 அடி உயர அஜானுபாகுவான வீரரான கேமரூன் கிரீன் இடது புறம் தாழ்வாக பந்த பந்தை அவர் அபாரமாக பிடித்தார். இதையடுத்து, சுப்மன் கில் அவுட்டாகி விட்டதாக கருதி ஆஸ்திரேலிய வீரர்கள் உடனே ஆரவாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

நடுவர் முடிவில் இந்திய அணி அதிருப்தி

ஆனால், சுப்மன் கில்லோ, கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்த விதத்தை திருப்தி அடையாமல் சந்தேகத்தில் களத்திலேயே நின்று கொண்டிருந்தார். இதையடுத்து, சுப்மன் கில் அவுட்டா இல்லையா என்பதை தீர்மானிக்க கள நடுவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார்.

மூன்றாவது நடுவரான ரிச்சர்ட் கேட்டில்பாரோ அனைத்து கோணங்களிலும் அந்த கேட்சை ரீப்ளே செய்து பார்த்தார். அதன்படி, அந்த கேட்சின் போது பந்தின் கீழ்ப் புறம் கிரீனின் கை விரல்கள் இருப்பதை அவர் உறுதி செய்தார். அந்த கேட்சை கிரீன் தனது இடது கையால் பிடித்திருந்தார். சில கோணங்களில், அவரது கை தரையில் பட்டாலும் பந்தை உறுதியுடன் பற்றியிருப்பது போல் தோன்றியது.

ஆனால், மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள், சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுக்கப்படாது என்று கருதினர். ஆனால், சுப்மன் கில் அவுட் என்று மூன்றாவது நடுவர் கெட்டில்பாரோ அறிவித்தார். இதையடுத்து, சுப்மன் கில் அவுட் விஷயத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கருதிய பார்வையாளர்கள் 'cheat-cheat-cheat' என்று ஆரவாரம் செய்ததை காண முடிந்தது.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம்

நடுவரின் முடிவை ஏற்று சுப்மன் கில், பெவிலியனுக்குத் திரும்பிய பிறகும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதுகுறித்து கள நடுவர்களிடம் பேசினார். மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் 'அவுட்' என்ற வார்த்தை வந்ததுமே, ரோகித் சர்மாவின் உதடுகள் 'இல்லை' என்று உரைத்தன. நடுவரின் முடிவில் அவர் உடன்படவில்லை.

ஓவல் மைதானத்தல் இந்த நாடகம் அரங்கேறிய அந்த தருணத்தில், சமூக வலைதளங்களில் நோபால் ஹேஷ்டேக் டிரென்டாகத் தொடங்கிவிட்டது. சுப்மன் கில் கேட்சை கிரீன் சரிவர பிடிக்கவில்லை என்றே இந்திய ரசிகர்கள் கருதினர். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்களோ, கிரீன் சரியாக கேட்ச் பிடித்துவிட்டதாக கருதினர்.

அந்த வீடியோ பதிவை மூன்றாவது நடுவர் சற்று பெரிதாக்கிப் பார்த்திருந்தால், பந்து தரையில் படுவது தெளிவாகத் தெரியும் என்று சில ரசிகர்கள் விமர்சித்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

சுப்மன் கில் அவுட் பற்றி சேவாக் ட்வீட்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான, ஓய்வு பெற்ற அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கும், சுப்மன் கில் அவுட்டை விமர்சித்துள்ளார். சந்தேகத்தின் பலனை எப்போது பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

சுப்மன் கில் நாட் அவுட் தான் என்றும் , நடுவரின் தவறான முடிவு அது என்றும் கூறி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மிகவும் முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் இதுபோன்ற சர்ச்சைகளை அனுமதித்திருக்கக் கூடாது என்று முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: