You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: 26 ஆண்டுகளுக்கு பிறகு கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் இந்த தகவலை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்காக, நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் அகில விராஜ்காரியவசம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் காலங்களில் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருந்தது.
தேர்தல் முடிவுகளின்படி, இலங்கையின் மிகவும் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.
மேலும், நாடாளுமன்றத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. தேசிய பட்டியலின் ஊடாக ஒருவர் மட்டுமே தேர்வாகியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் உள்கட்சி அதிருப்தியாளர்கள் ஆக இருந்தவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் வேறொரு கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஒரு குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.
இவ்வாறு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, இந்த முறைத் தேர்தலின் ஊடாக 54 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலக இன்று தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர், அதாவது 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது.
சுதந்திரமடைந்ததன் பின்னர், இலங்கையின் முதல் முதலாக ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியை கைப்பற்றியது.
இதன்படி, 1947 முதல் 1956, 1965 முதல் 1970, 1977 முதல் 1994, 2001 முதல் 2004 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியை கைப்பற்றியிருந்தது.
மேலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்றப்பட்டது.
இலங்கையில் தற்போதுள்ள அரசியலமைப்பு கூட, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான வரலாற்று பின்புலத்தை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, இன்று இலங்கை அரசியலில் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க அந்த கட்சியின் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.
ரணில் விக்ரசிங்க
ரணில் விக்ரமசிங்க பியகம தொகுதியிலிருந்து 1977ஆம் ஆண்டு முதன் முறையாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த காமினி திஸாநாயக்க 1994ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
1993 முதல் 1994, 2001 முதல் 2004 மற்றும் 2015 முதல் 2019 வரையான காலம் வரை ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக பதவி வகித்திருந்தார்.
அத்துடன், பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கட்சித் தலைவராகவும் அவர் பதவியேற்றிருந்தார்.
இவ்வாறான நிலைலையில், 26 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் தற்போது மாற்றம் ஏற்படவுள்ளது.
பிற செய்திகள்:
- இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன? மன்மோகன் சிங் வழங்கும் 3 யோசனைகள்
- முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று
- ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்கும் 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- இலங்கை தேர்தல்: இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரச்சனைகள் தீருமா?
- EIA 2020: "தேசத்தை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம்" - ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு
- சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரண வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரோனாவுக்கு பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: