You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பௌத்த விஹாரையை அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தடை
கொழும்பு, நாராஹேன்பிட்டி அபயாராம புத்த விஹாரையை அரசியல் மற்றும் தொழில்சங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்யும் உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அந்த விகாரையின் விகாராதிபதி முருத்தேட்டுவே ஆனந்த தேரருக்கு பிறப்பித்துள்ளது.
பத்பெறியே விமலஞான தேரர் எனும் பௌத்த துறவி தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த பின்னரே, நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அபயாராம விஹாரையை அரசியல் கூட்டங்கள் , தொழிற்சங்க கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதால், பொது மக்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக இந்த புகாரை சமர்ப்பித்த விமலஞான தேரர் கூறினார்.
எனவே, இத்தகைய நடவடிக்கைகளுக்காக விஹாரையை பயன்படுத்துவதை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்ததுடன் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 22-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடக சந்திப்புக்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்புக்கள் அபயாராம விஹாரையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஏ.ஆர் ரஹ்மானின் லண்டன் கச்சேரியால் சர்ச்சை; ட்விட்டரில் மோதிக் கொள்ளும் ரசிகர்கள்
- காஸிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் தவிக்கும் வன விலங்குகள் ( புகைப்படத் தொகுப்பு)
- இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்ய எதிர்ப்பு
- திரைப்பட விமர்சனம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
- லியு ஷியாவ்போ மரணம்: சர்வதேச விமர்சனங்களை நிராகரிக்கும் சீனா
- அறுவை சிகிச்சை மூலம் கையில் பொருத்தப்பட்ட கால் கட்டை விரல்..!
- பாகிஸ்தானின் ரகசிய நாத்திகவாதிகள்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்