சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை ராணுவ வீரர் மஹீஷ் தீக்ஷன? BoycottChennaiSuperKings ட்ரெண்டாவது ஏன்?

பட மூலாதாரம், Gareth Copley-ICC via getty images
அண்மையில் நடந்து முடிந்த ஐபில் மெகா ஏலம் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தற்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இலங்கை ராணுவத்தில் பணியாற்றுபவரான மஹீஷ் தீக்ஷனவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்ததன் எதிரொலியாக தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் BoycottChennaiSuperKings எனும் சென்னை அணிக்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்டாகத் தொடங்கியிருக்கிறது.
இலங்கை தமிழரின் கிரிக்கெட் அணியில் இடம்
21 வயதாகும் மஹீஷ் தீக்ஷன சுழற்பந்து வீசுவதில் சிறந்த ஆட்டக்காரர். கொட்டாஞ்சேனை புனித பெனடிகன் பள்ளியில் கல்வி பயிலும் காலப் பகுதியில் கிரிக்கெட் விளையாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான பிரபல கிரிக்கெட் போட்டியொன்றில் முதல் முறையாக விளையாடிய மஹீஷ் தீக்ஷன, கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் அடித்தார்.
லங்கா பிரிமீயர் லீக் போட்டிகளில் ஜஃப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் மஹீஷ். இந்த அணியின் உரிமையாளர் தமிழரான தொழில் அதிபர் சுபாஷ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் 2021ல் முதல் முறையாக இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றார் மஹீஷ் தீக்ஷன.
2021ல் தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இலங்கை சென்றிருந்தது. 1 - 1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தபோது இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறக்கப்பட்டார் மஹீஷ் தீக்ஷன.
தனது துல்லியமான பந்துவீச்சால் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்களை கைப்பற்றிய மஹீஷ், இலங்கை அணி தொடரை வெல்ல முக்கியப் பங்காற்றியவர். அறிமுகப் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி, அப்போதைய இலங்கை கேப்டன் தசுன் ஷனகாவால் 'மிஸ்ட்ரி ஸ்பின்னர்' என பாராட்டப்பட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அன்றிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் அஜந்தா மெண்டிஸ் இடத்தை நிரப்பும் பணியில் இறங்கினார். டி20 உலகக்கோப்பை இலங்கை அணியிலும் விரைவாகவே இடம்பிடித்தார்.
மஹீஷ் தீக்ஷனவின் பின்னணி என்ன?
சர்வதேச கிரிக்கெட்டில் மஹீஷ் விளையாடுவதற்கு முன் ராணுவத்தில் சேர்ந்து இலங்கை ராணுவ அணிக்காக விளையாடி வந்தவர். ராணுவத்தின் கிரிக்கெட் அணியில் இணைந்து பயிற்சியாளர் அஜந்தா மெண்டிஸ்-இடம் இருந்து சுழற்பந்துவீச்சின் நேர்த்திகளை கற்றிருக்கிறார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹீஷ் தீக்ஷன, "ராணுவத்தில் எனது முதல் பயிற்சியாளராக இருந்தவர் அஜந்தா மெண்டிஸ். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எனக்கு அறிவுரைகள் வழங்கி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவர் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்," என்றார்.
"ராணுவத்தில் சுமார் 150 கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். எனவே போட்டி மிக அதிகமாக உள்ளது. எங்களிடம் எங்கள் சொந்த டி20 லீக் (ராணுவ தளபதி கோப்பை) உள்ளது, அது எனக்கு எல்.பி.எல்.லில் (Lanka Premier League) இடம் பிடிக்க உதவியது. இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவத்திடம் இருந்து பெரும் ஆதரவு உள்ளது. எங்களுக்கான வசதிகள் எளிதில் கிடைப்பதால், எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த ராணுவம் எந்தளவுக்கு ஆதரவு அளித்துள்ளது என்பதை இது காட்டுகிறது" என்றார் மஹீஷ் தீக்ஷன.
சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வலுக்கும் எதிர்ப்பு
''இலங்கை உள்நாட்டு போரில் ராணுவத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்'' என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது குறித்து சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் நீட்சியாக சென்னை அணிக்கு எதிராக BoycottChennaiSuperKings என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சில் கோலோச்சியவர் முத்தையா முரளிதரன். இலங்கை தமிழர் பிரச்னை அவ்வப்போது வெடித்தால் முத்தையா முரளிதரனுக்கும் இதர இலங்கை வீரர்கள் சென்னை வந்து ஐபிஎல் விளையாடுவதற்கும் எதிர்ப்பு கிளம்புவது வழக்கம்.
இதனால் பல சீசன்களில் சென்னை அணி ஓர் இலங்கை வீரரை கூட ஏலத்தில் எடுக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து சென்னை அணி,'மிஸ்ட்ரி ஸ்பின்னரான' மகேஷ் தீக்ஷனாவை ஏலத்தில் எடுத்திருக்கிறது. சுழற்பந்துவீச்சில் ஒரு இளம் வீரரை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்வரும் பல சீசன்களில் அவரை வைத்து பல விக்கெட்களை அறுவடை செய்யலாம் என்பதே சி.எஸ்.கே.வின் எண்ணம். ஆனால் அது நீடிக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

பிற செய்திகள்:
- கமிலா வலீவா: 15 வயது ரஷ்ய வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி
- அதிமுக, பாஜக காக்கும் 'பரம ரகசியம்' என்ன? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
- மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?
- சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதி கோரும் கர்நாடக மாணவிகள்
- 'பீஸ்ட்': காதலர் தினத்தில் வெளியான 'அரபிக்குத்து' பாடல் - இதில் புதிய தகவல் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்









