இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: பிரதமரின் பேச்சை கேட்காத பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ்

இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

ஞாயிற்றுக்கிழமை அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் மைதனாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்த போட்டிக்கு முன்பு ஜூன் 15 ஆம் தேதி ட்விட்டரில் பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

சில சிறப்பான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் டாசில் வென்றால் பேட்டிங் தேர்வு செய்யுங்கள் என்றும் சில பரிந்துரைகளை செய்திருந்தார்.

நேற்று முதல் இன்னிங்ஸின் 46 ஓவர் வரை மழை இல்லாமல் இருந்ததால் இந்தியா தொடர்ந்து ஆடி 336 ரன்களுக்கு எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கத்திலிருந்து சரியாக ஆடவில்லை என்றாலும் 36 ஓவருக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.

மழை காரணமாக இரண்டாம் இன்னிங்ஸ் இருமுறை பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 40 ஓவராக குறைக்கப்பட்டது; அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்நிலையில், நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "இன்னொரு ஸ்ட்ரைக்கிலும் இந்தியா வென்றது" என ட்வீட் செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மோதல்

பொதுவாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இது உலகக் கோப்பை போட்டி. எனவே போட்டிக்கு முன்னதாக இருநாட்டு ரசிகர்களும் தங்கள் அணியே வெல்ல வேண்டும் என தீவிரமாக இருந்தனர்.

சமூக வலைதளங்களிலும் இருதரப்பிலும் பல்வேறு கருத்துக்களும், வீடியோக்களும் பகிரப்பட்டன.

ஆனால் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் சமூக வலைதங்களில் பிரதானமாக ஒலித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :