இலங்கை பொருளாதார நெருக்கடி: 7500 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் இந்தியா - முக்கிய தகவல்கள்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா 7500 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி; படத்தில் பசில் ராஜபக்ச மற்றும் மோதி

பட மூலாதாரம், Narendra Modi

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், "இந்தியா இலங்கையுடன் துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 7500 கோடி) மதிப்பிலான கடனுதவிகள் வழங்க கையெழுத்தாகியுள்ளது," என்று தெரிவித்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்கான திட்டங்கள் முன்னெடுப்பு குறித்து பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் உரையாடினார்.

இந்தியாவின், பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் அண்டை நாடுகள் கொள்கையில் இலங்கை முக்கிய பங்காற்றுவது குறித்தும் இந்திய பிரதமர் பேசினார்.

மேலும் இலங்கையின் மக்களுடன் இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை பிரதமர் மோதி மீண்டும் வலியுறுத்தினார்.

அதேபோல, இருநாட்டு சுற்றுலாப் போக்குவரத்துகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் மோதி உரையாடினார்," என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, "இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்ததில் மகிழ்ச்சி, இருநாட்டு பொருளாதார கூட்டு நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் முதலீடு வலுப்பெறுவதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

முன்னதாக, பசில் ராஜபக்சவுடனான சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பொருளாதார கூட்டணி குறித்து பயனுள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து செயாலாற்றும்" என்று தெரிவித்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது.

இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் முதல் சமையல் எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

பெட்ரோல், டீசலின் விலை 250 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், இலங்கைக்குக் கூடுதலாக சுமார் ரூ.7,500 கோடி கடனுதவி வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: