டெல்லி துணை முதல்வர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை உடைத்த மர்ம நபர்கள்

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சிலர் சேதப்படுத்தியிருக்கிறார்கள். அந்த செயலில் ஈடுபட்டது பாரதிய ஜனதா கட்சியினர் என்று டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உச்ச நீதிமன்ற சாலை சந்திப்புக்கு வெகு அருகேயும் பிரகதி மைதானத்துக்கு எதிரேயும் உள்ளது. இந்த நிலையில், அவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் வியாழக்கிழமை புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ குல்தீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார். அந்த காணொளி மணிஷ் சிசோடியா வீடு அமைந்த இடத்தில் பொருத்தப்பட்டதாக தெரிகிறது.
அதில், அவரது வீடு அமைந்த சந்தில் சுமார் 10 முதல் 15 பேர் வரை திடீரென வேகமாக வருகிறார்கள். வாயிலில் இரு காவலர்கள் நின்றிருந்தபோதும், அவர்களை தள்ளிக் கொண்டு அனைவரும் வீட்டுக்குள் செல்வது போல காட்சிகள் உள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகக்கூறியுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் வேளையில் எவ்வாறு ஒரு கும்பலால் மணிஷ் சிசோடியாவின் வீட்டுக்குள் நுழைந்து சூறையாட முடிந்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்த சம்பவம் நடந்தபோது மணிஷ் சிசோடியா அவரது வீட்டில் இல்லை.
இதேவேளை, மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி. நட்டா சென்ற வாகனங்கள் இலக்கு வைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், "ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் இலக்கு வைக்கப்படுவது மிகவும் கவலை தருகிறது. இதற்கு பொறுப்பானவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
அவரது அந்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டிய கேஜ்ரிவால், "காவல்துறையினர் முன்னிலையில் ஒரு துணை முதல்வரின் வீடு தாக்கப்படுவது தவறு என்று கருதுகிறீர்களா, விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி மீதும் டெல்லி அரசு மீதும் அப்படி என்ன பாஜகவுக்கு கோபம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












