You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சோதனைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை மேம்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு செப்டம்பர் 28ஆம் தேதியன்று அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அக்டோபர் ஆறாம் தேதியன்று விஜயகாந்த் மீண்டும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே சேர்க்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.
தற்போது அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலமும் அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்று கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு - இந்தியா எப்படி சமாளிக்கும்?
- தொல்லியல் படிப்புக்கான தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் சேர்ப்பு
- ஹாத்ரஸ் சம்பவம்: கொலைவெறி தாக்குதல், நள்ளிரவில் தகனம், முகத்தைக்கூட பார்க்காமல் தவித்த குடும்பம்
- ’இட்லியை தவறாக பேசுவதா?’ - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: