டெல்லி கலவரம் வழக்கு: யெச்சூரி, யோகேந்திர யாதவ், அபூர்வானந்துக்கு எதிரான வாக்குமூலத்துக்கு வலுவுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீர்த்தி தூபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியானின் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார நிபுணர் ஜயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆர்வலர் அபூர்வாநந்த், மற்றும் ஆவணப்பட இயக்குநர் ராகுல் ராய் ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு உடந்தையாக செயல்பட்டதாக துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சீதாராம் யெச்சூரி, "டெல்லி போலீஸ் பாஜகவின் மத்திய அரசாங்கத்தின் கீழும், உள்துறை அமைச்சகத்தின் கீழும் பணியாற்றுகிறது. டெல்லி போலீஸின் இந்த சட்டவிரோத செயல் பாஜவில் உள்ள மூத்த தலைவர்களின் குணங்களை பிரதிபலிக்கின்றன. அவர்கள் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு அஞ்சுகின்றனர்." என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"இது டெல்லி போலீசாரின் தீங்கான எண்ணத்தை காட்டுகிறது. சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜயதி கோஷ் ஆகியோர் கலவரத்தை தூண்டியதாக கூறுவதை போன்ற அபத்தமான ஒன்று எதுவும் இல்லை" என வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
வழக்கு என்ன?
டெல்லி கலவரம் தொடர்பாக பல முதல் தகவல் அறிக்கைகளை காவல்துறை பதிவு செய்திருந்தாலும், தற்போதைய தலைவர்கள் சிலர் சேர்க்கப்பட்டுள்ள வழக்கு அனைத்தும் முதல் தகவல் அறிக்கை 50 தொடர்புடையது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், பின்ஜ்ராதோட் என்ற பிரசார இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த தேவாங்கானா காலிதா, நடாஷா நார்வால், சீலம்பூரைச் சேர்ந்த குல்ஃபாபிஷா ஃபாத்திமா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் துணை குற்றப்பத்திரிகையில்தான் யெச்சூரி, அபூர்வானந்த், யோகேந்திர யாதவ் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், தேவாங்கா காலிதா
இந்த மாணவர்கள், சீலம்பூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ செளத்ரி மதின் அகமது உதவி செய்ததாக கூறியதாக காவல்துறை கூறுகிறது.
அவர்கள் தெரிவித்த வாக்குமூலங்கள் பலவற்றை பிபிசி மிக உன்னிப்பாக கவனித்தது. இத்தகைய வாக்குமூலம் நீதிமன்றத்தில் எடுபடுமா என சில சட்ட நிபுணர்களிடம் பிபிசி பேசியது.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டீ, "காவல்துறையினர் முன்னிலையில் அளிக்கப்பட்ட இந்த வாக்குமூலம், மிக முக்கியமான துப்பு கிடைப்பதற்கோ ஆதாரத்தை சேகரிக்கவோ பயன்படும்பட்சத்தில் மட்டுமே நீதிமன்றத்தில் எடுபடும். அதாவது, ஒரு நபர் ஒரு கொலை குற்றம் செய்வதாக வைத்தக் கொள்ளுங்கள். அவர் அந்த குற்றத்தை உணர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் என்றால், அவர் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்து அதில் அவரது கைரேகை இருப்பதை நிரூபிக்கும்பட்சத்திலேயே அந்த நபரின் வாக்குமூலம் எடுபடும். பொத்தாம் பொதுவாக தரப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் எடுபடாது" என்று அவர் கூறினார்.
இது தவிர, டெல்லி கலவரத்தின் விசாரணையை உன்னிப்பாகக் கவனித்து வரும் ஒரு மூத்த வழக்கறிஞர் பிபிசியிடம் பேசினார்.
"மூன்று பெண்களின் வாக்குமூலத்தையும் நான் படித்திருக்கிறேன். அவை எந்த வகையிலும் சட்ட வரம்புக்குள் வராதவை. குற்றம்சாட்டப்பட்டவர் பிறர் மீது குற்றம்சாட்டும்போது, அதை அவர் நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் போதிய ஆதாரம் கிடைக்காவிட்டால், அவரது வாக்குமூலம் நீதிமன்றத்தில் எடுபடாது." என்று அந்த வழக்கறிஞர் கூறினார்.

பட மூலாதாரம், நடாஷா
மூத்த வக்கீல்களின் கூற்றுப்படி, சட்டவிரோத நடவடிக்கைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களில், அதாவது யுஏபிஏ, புதிய சான்றுகள் அல்லது தடயங்களை வெளிப்படுத்தாவிட்டால், வெளிப்படுத்தல் அறிக்கை முக்கியமல்ல.
வெளிப்படையாக, இந்த அறிக்கைகளின் செல்லுபடியை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும், ஆனால் பொதுவாக அவை சட்டப்பூர்வமாக சவால் செய்யப்படலாம்.
முதல் தகவல் அறிக்கை எண். 50 என்றால் என்ன?
கடந்த பிப்ரவரி மாதம், வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 581 பேர் பலத்த காயமடைந்தனர். கடந்த பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை இந்த கலவரங்களில் மொத்தம் 751 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
அவற்றில் ஒன்று எஃப்.ஐ.ஆர் 50 ஆகும், இது ஜாஃபராபாத்தின் 66 புட்டா சாலையில் நடந்த வன்முறையைப் பற்றியது.
பிப்ரவரி 26 அன்று ஜeஃப்ராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின்படி, "சிஏஏ அமல்படுத்தப்படுவதை எதிர்த்து முஸ்லிம் சமூகம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது, அதன் காரணமாக இப்பகுதியில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பிப்ரவரி 24 அன்று பிரிவு 144 தடை உத்தரவு போடப்படுகிறது. இருப்பினும், பிப்ரவரி 25 ம் தேதி ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டபோது வடகிழக்கு மாவட்டத்தில் பரவலாக வன்முறை காணப்பட்டது. பிற்பகல் 1 மணியளவில், ஒரு கும்பல் கிரசென்ட் பள்ளிக்கு அருகிலுள்ள 66 ஃபுட்டா சாலையில் வன்முறை மற்றும் கல் வீச்சில் ஈடுபட்டது. அது தொடர்பாக 48, 49 ஆகிய இரு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன." என்று கூறப்பட்டுள்ளது.
அந்த முதல் தகவல் அறிக்கையில் கும்பல் என்றே கூறப்பட்டது. யார், எவர் என்ற விவரம் இடம்பெறவில்லை. எனினும், தேவாங்கானா காலிதா, நடாஷா நார்வால், குல்ஃபிஷா ஃபாத்திமா ஆகியோர் மீது டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியது. கொலை முயற்சி, கொலை, ஆயுத சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த எஃப்.ஐ.ஆரில் எஃப்.ஐ.ஆர் மற்றும் வன்முறை கும்பல் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் எந்த பெயரும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், இந்த வழக்கில் டெவங்கனா கலிதா, நடாஷா நர்வால் மற்றும் குல்பிஷா பாத்திமா மீது டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் மீது 307 (கொலை முயற்சி), 302 (கொலை) மற்றும் 25, 27 பிரிவு சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
தில்லி கலவரம் தொடர்பான 'சதி வழக்கில்' மூவரும் தற்போது யுஏபிஏ சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர்.
கலவரத்தில் என்ன நடந்தது?
டெல்லியின் வட கிழக்கு பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் சுமார் 53 பேர் உயிரிழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி போலீசாரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் 40 முஸ்லிம்களும், 13 இந்துக்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கலவரங்களுக்கு பின்னால் தீவிர சதி இருப்பதாக டெல்லி போலீசின் குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "உறுதிப்படுத்தப்படாத போலீசாரின் அறிக்கை ஒன்றில் ஒரு குற்றம் சுமத்தப்பட்ட நபரால் எனது பெயரும், யெச்சூரியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அது நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது." என யோகேந்திர யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டெல்லி காவல்துறை அதிகாரிகள், "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைத்து, உரையாற்றிய ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தில் இவர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படுவதில்லை" என்று கூறியுள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசி இந்தி சேவையிடம் பேசிய டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த், "தனிப்பட்ட கொள்கைகளுக்காக டெல்லி போலீசார் பயன்படுத்தப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது," என தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
டெல்லி கலவரம் தொடர்பாக மொத்தம் 715 முதல் தகவல் அறிக்கைகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். அதுகுறித்த ஆவணங்களை பொதுவெளியில் தெரிவிக்க டெல்லி போலீசார் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் டெல்லி கலவரம் குறித்து விசாரித்து வரும் டெல்லியின் சட்டசபை கமிட்டி, ஃபேஸ்புக்கின் இந்திய தலைவர் அஜித் மோகனை விசாரணைக்கு அழைத்துள்ளது.
இது குறித்து ஃபேஸ்புக் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஃபேஸ்புக் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளை ஒடுக்கும் விதிகளையும், கொள்கைகளையும் சரியாக மேற்கொள்ளவில்லை என இந்த சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












