"நரேந்திர மோதி செய்த பேரழிவுகள்" ட்விட்டரில் பட்டியலிட்ட ராகுல் காந்தி

Rahul Gandhi attacks Nrendra Modi in Twitter

பட மூலாதாரம், Rahul Gandhi/FB

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, 'மோதி செய்த பேரழிவுகள்' என்று ட்விட்டரில், இன்று காலை பட்டியலிட்டுள்ள பதிவு, இன்று மதியம் வரை சுமார் 23 ஆயிரம் முறைக்கு மேல் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது.

பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவிகிதம் என்ற அளவில் சுருங்கியுள்ளது. இதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசை கடுமையாக பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சித்து வருகின்றனர்.

ராகுல் காந்தியும் இன்று காலை அவ்வாறு ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்திருக்கிறார்.

அதில் நரேந்திர மோதி அரசு மீதான விமர்சனங்களையும், அரசுக்கு சாதகமில்லாத அலுவல்பூர்வ புள்ளி விவரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

அந்தப் பட்டியல்

'மோடி செய்த பேரழிவால் வாடும் இந்தியா' என்ற தலைப்பில் அவர் பகிர்ந்த பட்டியல்

1. வரலாறு காணாத அளவுக்கு ஜிடிபி சரிவு.

2. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை.

3. 12 கோடி வேலை இழப்பு.

4. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கை மத்திய அரசு வழங்காமல் இருப்பது.

5. தினசரி எண்ணிக்கை அடிப்படையில் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் மரணங்களில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் இருப்பது.

6. எல்லையில் வெளிநாட்டினரின் அத்துமீறல்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்திய - சீன எல்லையில் இருநாட்டினரிடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், ராகுல் காந்தி தனது பதிவில் சீனாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: