"இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது" - பிரதமர் நரேந்திர மோதி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி

இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் பிராந்தியத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகளுக்கு இடையிலான கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டிருப்பது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

"நமது ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது. நமக்கு ஒற்றுமையும் நாட்டின் இறையாண்மையும் மிகவும் முக்கியம். இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் இந்தியாவை தூண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது" என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்த கைகலப்பில் சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இன்று மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் கொரோனா தொற்று சூழல் குறித்து காணொளி காட்சி மூலம் நடைபெற்று வரும் கலந்துரையாடலின்போது பிரதமர் மோதி இதனை தெரிவித்தார். மேலும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா - சீனா எல்லை பிரச்சனை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக நாளை மறுநாள் (ஜூன் 19) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர அழைப்பு விடுத்துள்ளார் என்று பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

'பிரதமர் பதிலளிக்க வேண்டும்'

"இன்று இந்த விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களிடையே கோபமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் முன்வந்து என்ன நடந்தது என்பதையும், சீனா நமது நிலங்களை எவ்வாறு ஆக்கிரமித்தது என்பதையும், நமது வீரர்கள் 20 பேர் ஏன் உயிரிழந்தனர் என்பதையும், தற்போது என்ன சூழல் நிலவுகிறது என்பதையும் பிரதமர் தெரிவிக்க வேண்டும்," என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

"நமது ராணுவ வீரர்களில் எத்தனை பேரை காணவில்லை. எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது? இதை எதிர்கொள்வதற்கான நாட்டின் கொள்கை என்ன?"

"20 ராணுவ வீரர்களின் தியாகம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. ராணுவ வீரர்களுக்கு எனது ஆழ்மனதிலிருந்து மரியாதை செலுத்துகிறேன். அதே சமயம் இந்த துயரை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ வீரர். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய ராணுவ வீரர். (கோப்புப்படம்)

கல்வான் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த பகுதியை இந்தியாவும் சீனாவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதி வருகின்றன.

இந்தப் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான் இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கிறது. இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள அக்சாய் சீனா பகுதி தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த பகுதி தங்களுக்கு சொந்தமானது என இந்தியா உரிமை கோரி வருகிறது.

1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தீய - சீனப் போரின்போது, கல்வான் நதி போரின் மையப்பகுதியாக இருந்ததை வைத்தே அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கிறார் சர்வதேச விவகார நிபுணரான எஸ்.டி முனி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: