தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - இந்தக் கல்வியாண்டே அமலாகிறது

பட மூலாதாரம், VIKRAMRAGHUVANSHI via Getty Images
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள ஆணை தெரிவிக்கிறது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தச் சட்டத்தில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் தேர்வாகாத மாணவர்களுக்கு தேர்வு முடிவான நாளில் இருந்து இரண்டு மாத காலத்துக்குள் மறு தேர்வு நடத்தப்படும் எனவும் வழிவகை செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அந்தத் தேர்விலும் தேர்வாகத மாணவர்கள் மீண்டும் 5 மற்றும் 8ஆம் வகுப்பே படிக்க வேண்டும்.
இந்தச் சட்டத்திருத்தம் 2019 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசிதழில் அறிவிக்கை தெரிவிக்கிறது.
2019-2020ம் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும், முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








