'தங்கல்' பட நடிகை ஜைரா அளித்த பாலியல் புகார் - ஒருவர் கைது

'தங்கல்'

பட மூலாதாரம், ZAIRAWASIM_/INSTAGRAM

விமான பயணத்தின் போது, தான் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக தங்கல் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜைரா வாசிம் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று, ஜைரா டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்தது.

17 வயதான அவர், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றினை பதிவு செய்திருந்தார். அதில், விமானத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை அழுதுகொண்டே விவரிக்கிறார். விமானத்தில் தனது இருக்கைக்குப் பின்னால் அமர்ந்துகொண்டிருந்த நடுத்தர வயது ஆண் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறுகிறார்.

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

பாதி தூக்கத்தில் இருந்தபோது பின்னால் அமர்ந்துகொண்டிருந்த நபர், தன் பின்புறத்திலும், கழுத்திலும் தொட்டு தொந்தரவு செய்ததாக ஜைரா வாசிம் பதிவிட்டுள்ளார். விமான பணியாளர்கள் யாரும் தனக்கு உதவி செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஏர் விஸ்தாரா,''சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்தி வருகிறோம். இதுபோன்ற நடத்தையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை'' எனக் கூறியது.

ஜைரா வாசிம் வீடியோவில் மேலும் கூறுகையில்,'' நமக்கு நாமே உதவ முடிவு செய்யாவிட்டால், யாரும் நமக்கு உதவ முன்வரமாட்டார்கள்'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :