You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணிகள்: கடந்து வந்த பாதை
தமிழகத்தில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணி நீங்கலாக, அதிமுக தலைமையகத்தில் இன்று சந்தித்து இணைந்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்தார். அதன் பிறகு சில நாட்கள் முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தார்.
இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பன்னீர்செல்வம் கிளம்பினார். அதன் பிறகு ஏற்பட்ட உள்கட்சி மோதலால் சசிகலா தலைமையிலான அணி ஒரு பிரிவாகவும், பன்னீர்செல்வம் அணி தனியாகவும் செயல்பட்டன.
பின்னர் சசிகலா சிறை சென்றதும் அவரது உறவினர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அதிமுகவினர் ஒரு அணியாக செயல்பட்டனர். இந்நிலையில் சசிகலா அணிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி குழுவினர் கருத்து வெளியிட்டதால் அந்த அணியில் பிளவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மூன்று அணியாக அதிமுகவினர் செயல்பட்டு வந்த நிலையில் இன்று, டி.டி.வி.தினகரன் நீங்கலாக, எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுக தலைமையகத்தில் இன்று சந்தித்துப் பேசினர். அதன் முடிவில் இருவர் தலைமையிலான அணிகளும் இணைவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த இரு தலைவர்களும் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தது முதல் தற்போது வரை கடந்து வந்த பாதையை நினைவுப்படுத்தும் நாட்குறிப்பு இது.
சென்னையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அதிமுக தலைமைக்கு எதிராக கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி திரும்பிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுகவில் இன்று இணைய எடுத்த முடிவவரை பதிவான முக்கிய நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கிறது இந்த நாட்குறிப்பு பட்டியல்:
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :