உதட்டுப் பிளவுடன் பிறந்த குழந்தை கொலை: 2 பேர் கைது
உதடு பிளவுடன் பிறந்த குழந்தையொன்றை கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேர் சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், n
பிறந்து இரண்டே நாட்களான இந்த குழந்தைக்கு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ராசாயன ஊசியை ஏற்றினார் என அக்குழந்தையின் தாத்தாவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஊசிக்கான பொட்டாசியம் க்ளோரைட் இராசயனத்தை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரவலான பிறப்புக் குறைபாடான உதடு பிளவு என்பது, சுலபமாக சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சனையாகும்.








