சீனாவின் நிலவு திட்டத்துக்கு மூளையாக விளங்கும் 24 வயது பெண் கமாண்டர்

ஸூ செங்க்யூ

பட மூலாதாரம், CCTV

படக்குறிப்பு, ஸூ செங்க்யூ

ஸூ செங்க்யூ (Zho Chengyu) தான், சீனாவின் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த 24 வயது இளம் பெண் விண்வெளி கமாண்டர்.

சீனாவின் அரசு ஊடகம், சாங்கே-5 விண்வெளித் திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தவர்களில் ஒருவராக ஸூ-வையும் குறிப்பிட்டதால், சீனாவின் வெய்போ சமூக வலைதளத்தில் ஸூ பயங்கர டிரெண்டிங்கில் இருக்கிறார்.

சாங்கே-5 திட்டத்தில் இவர் செய்த அசாத்தியமான வேலைகளால் இவர் வைரலாகிக் கொண்டு இருக்கிறார். சீனாவின் சாங்கே-5 என்பது நிலவை ஆராய்ச்சி செய்யும் திட்டம்.

வென்சங் விண்வெளி ஏவுதளத்தில், ஸூ செங்க்யூவை அனைவரும் மரியாதையோடு "பெரிய சகோதரி" என்று தான் அழைக்கிறார்கள்.

சீனாவின் சாங்கே-5 திட்டத்துக்குப் பின் இருக்கும் 24 வயது இளம் பெண்

பட மூலாதாரம், CCTV

ஸூ தான் ராக்கெட் கனெக்டர் சிஸ்டம் என்கிற முக்கியமான வேலையைப் பார்த்துக் கொண்டார்.

சீன மக்கள் ஸூ-வின் அறிவுத் திறனைப் பாராட்டிக் கொண்டாடுகிறார்கள். அதோடு, ஸூ-வை சீனாவின் பெருமிதம் எனவும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வெய்போ பயனர்கள்.

டுகாய் குய்சோ நெட் (Duocai Guizhou Net) என்கிற செய்தி வலைதளம், பலமுறை ஸூ-வை நேர்காணல் செய்ய அனுமதி கோரியது. தொடர்ந்து மறுத்திருக்கிறார் ஸூ. தன் வேலையில், புகழ் குறுக்கிட்டு விடக்கூடாது என ஸூ விரும்புவதாக டுகாய் செய்தி வலைதளம் குறிப்பிட்டு இருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில், சாங்கே-5, நிலவில் தரையிரங்கும் சீனாவின் மூன்றாவது வெற்றிகரமான திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சீனாவில், சந்திரப் பெண் கடவுளை சாங்கே என்பார்கள். ஆகையால் தான், சீனா தன் நிலவு ஆராய்ச்சித் திட்டத்துக்கு சாங்கே-5 எனப் பெயரிட்டிருக்கிறது.

நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மண்ணை சேகரித்துக் கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் நிலவு தோன்றியது குறித்து, விஞ்ஞானிகள் கூடுதலாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சாங்கே-5 வெற்றிகரமாக நிலவில் பாறைகள் மற்றும் மண்ணை எல்லாம் சேகரித்து, சீன நாட்டுக் கொடியை எல்லாம் நாட்டிவிட்டு, நிலவை விட்டுக் கிளம்பிவிட்டது. இன்னும் சில நாட்களில் பூமியை வந்தடையும்.

இந்த திட்டம் சரியாக நடந்துவிட்டால், கடந்த 40 ஆண்டுகளில் சந்திரனில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வந்த திட்டமாக வரலாற்றில் தன் இடத்தைப் பிடிக்கும் சாங்கே-5. அதோடு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு, நிலவின் மாதிரிகளைச் சேகரித்த மூன்றாவது நாடாக சீனா சாதனை படைக்கும்.

விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தை, தன் நாட்டின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வெளிக்காட்டும் ஒரு விஷயமாகப் பார்க்கிறது சீனா. அதோடு தன் திறமையை உலக அரங்கில் பறைசாற்றும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்கிறது சீனா.

சீனாவின் சாங்கே-5 திட்டத்துக்குப் பின் இருக்கும் 24 வயது இளம் பெண்

பட மூலாதாரம், CNSA/CLEP

சந்திரனில் சோதனைகளை நடத்துவது ஒரு நாட்டின் முழுமையான பலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என, கடந்த 2006-ம் ஆண்டு, சீனாவின் அரசு ஊடகமான பீப்பிள்ஸ் டெய்லியிடம் கூறியிருந்தார் பேராசிரியர் ஓயங் சியுயன் (Ouyang Ziyuan).

கடந்த ஆண்டில், பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்தில், இயந்திர விண்கலத்தை ஏவிய முதல் நாடாக உருவெடுத்தது சீனா. அடுத்த சில தசாப்தங்களில், நிலவின் ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் திட்டங்களை தீட்டிக் கொண்டு இருக்கிறது சீனா.

தன் நாட்டில் இருக்கும் வலுவான சாதனைப் பெண்களை முன்னிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது சீனா.

சீன அரசின் உயர் அதிகாரிகள் பெரும்பாலும் ஆண்களாக் இருக்கிறார்கள். அரச பதவிகள் ஆண்களால் நிறைந்து இருக்கிறது.

சீனாவில் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாகவே இருப்பதாக, சீன மக்கள் கருதுகிறார்கள்.

சீனாவின் சாங்கே-5 திட்டத்துக்குப் பின் இருக்கும் 24 வயது இளம் பெண்

பட மூலாதாரம், CCTV

கடந்த நவம்பர் மாதத்தில், மருத்துவ விஞ்ஞானியான சென் வெய் (Chen Wei), வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூ சுன்யிங் (Hua Chunying), யு.எஃப்.சி போட்டியாளரான சாங் வெய்லி (Zhang Weili) போன்ற பெண்களின் சாதனைகளைக் குறித்து கருத்து தெரிவிக்குமாறு, சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை, இணையவாசிகளுக்கு அழைப்புவிடுத்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :